முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டத்தின் இறுதிவரை விளையாடுவது தான் எனக்கு முக்கியம் : சூர்யகுமார் யாதவ்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      விளையாட்டு
Suryakumar-Yadav 2022-05-01

Source: provided

மும்பை : 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.மும்பை டி.ஓய்.பட்டீல் மைதானத்தில்  நடைபெற்ற  44-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்  மோதின  

இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது .

இந்த போட்டியில் மும்பை அணியில் அதிகபட்சமாக  அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ்  51 ரன்கள் எடுத்தார் .

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இது குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது ;

ஆட்டத்தின் இறுதி வரை விளையாடுவது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது, ஆனால் 3-வது இடத்தில் களமிறங்கி   எனது வேலை ரோஹித் விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்வதுதான். 

3-வது இடத்தில் விளையாடுவது பற்றி யாதவ் கூறுகையில், "நான் எல்லா நிலைகளிலும் பேட்டிங் செய்வதை ரசிக்கிறேன் , ஆனால் நான் 3-வது இடத்தில் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன், ஏனென்றால் நான் என் இன்னிங்ஸை அதற்கேற்ப வேகப்படுத்தி ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து