முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் நாடு தழுவிய பந்த் அனைத்து பணிகளும் முடங்கின

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      உலகம்
Sri-Lanka 2022 05 06

Source: provided

கொழும்பு : இலங்கை அதிபரை பதவி விலகக்கோரி நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே  பதவி விலகக்கோரி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் உள்ள வணிக சங்கங்கள் நேற்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் ரயில்வே, போக்குவரத்துத் துறை, வங்கிகள், சுகாதாரத்துறை, மின்சாரத் துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களும் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முன்னதாக கடந்த ஏப்ரல் 29-ம் தேதியும் 1,000-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள்  இணைந்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து