முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம், அவரது மகன் வீடுகளில் சோதனை ஏன்? - சி.பி.ஐ. விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      இந்தியா
Chidambaram 2022-05-17

Source: provided

புதுடெல்லி : ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் வீடுகளில் சோதனை ஏன் ? என்பது குறித்து சி.பி.ஐ விளக்கமளித்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெற்றன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் 7 சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை ஏன் என்பது குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவிக்கையில், சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்திக் சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சம்பந்தமாக கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சுமார் 250 விசாக்கள் வாங்கித்தருவதாக கார்த்திக் சிதம்பரம் லஞ்சம் பெற்று மோசடி செய்துள்ளதாக புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது என தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து