LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. முன்னாள் வீரராக அறியப்பட்ட ரவி சாஸ்திரி பல ஆண்டுகளாக வர்ணனையாளராகவும் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். கிரிக்கெட் ஒளிபரப்புக்கு அவருடைய வர்ணனை பெரிய பலமாக இருந்தது. எனினும் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆன பிறகு அவரால் அந்தப் பணியில் ஈடுபட முடியாமல் போனது. பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய பிறகு ஐபிஎல் 2022 போட்டியில் வர்ணனைக் குழுவில் இடம்பெற்றிருந்தாலும் இறுதிச்சுற்றில் மட்டுமே ஆங்கில வர்ணனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்டில் வர்ணனை செய்து வருகிறார் ரவி சாஸ்திரி. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி விளையாடும் சர்வதேச ஆட்டங்களில் வர்ணனை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. முக்கியமான இந்த டெஸ்டில் ரவி சாஸ்திரி வர்ணனையாளராகப் பணிபுரிவதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
________________
இங்கிலாந்து அணிக்கு ஜாஸ் பட்லர் கேப்டன்
இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாகப் பிரபல வீரர் ஜாஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். 2019 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கி கோப்பையை வென்ற இயன் மார்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகச் சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பேட்டரான ஜாஸ் பட்லர், இங்கிலாந்து ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்காக 9 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் அவர் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். கேப்டனாக அறிவிக்கப்பட்ட பட்லர், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் தனது புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் மேத்யூ மாட் நியமிக்கப்பட்டார்.
_________________
ஒரு வருடத்தில் இந்திய அணிக்கு 8 கேப்டன்கள்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டுக்கு இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த ஜூலை முதல் இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் 8-வது கேப்டன் ஆகிறார் பும்ரா. ஜூலை 2021 முதல் ஷிகர் தவன், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, கே.எல். ராகுல், ரிஷப் பந்த், பாண்டியா, பும்ரா ஆகியோர் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்கள்.
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து இந்திய அணியில் கேப்டன்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியிருக்கிறது. ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு இந்தியாவின் 8-வது கேப்டனாக உள்ளார் பும்ரா. கேப்டன்களின் எண்ணிக்கை அதிகமாகக் காரணம்? கோலிக்கு அடுத்ததாக இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். எனினும் ஓய்வு, காயம், கொரோனா எனப் பல்வேறு காரணங்களால் ரோஹித் சர்மாவால் சில தொடர்களில் இடம்பெற முடியவில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் புதிய கேப்டன்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.
___________________
இலங்கை எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணி வெற்றி
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. காலேவில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் எடுத்து 109 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்திருந்த ஆஸி. அணி, நேற்று மீதமுள்ள 2 விக்கெட்டுகளை இழந்தது.
2-வது இன்னிங்ஸிலும் தடுமாறிய இலங்கை அணி 22.5 ஓவர்களில் 113 ரன்களுக்குச் சுருண்டது. லயன், ஸ்வெப்சன், டிராவிஸ் ஹெட் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் அற்புதமாகப் பந்துவீசினார்கள். 2-வது இன்னிங்ஸில் 5 ரன்கள் இலக்கை 0.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. ரமேஷ் மெண்டிஸ் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார் வார்னர். முதல்முறையாக இலங்கையில் விளையாடிய டெஸ்டில் 2-வதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது ஆஸி. அணி. இதற்கு முன்பு வெற்றி பெற்ற ஏழு முறையும் முதலில் பேட்டிங் செய்தது. கேம்ரூன் கிரீன் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், காலேவில் ஜூலை 8 அன்று தொடங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 2 days 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 4 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 1 day ago |
-
75-வது சுதந்திர தினம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார் : விருதுகள், பதக்கங்களை வழங்கி கவுரவிக்கிறார்
14 Aug 2022சென்னை : நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தேசியக்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார்.
-
பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம் அண்ணாமலை அறிவிப்பு
14 Aug 2022சென்னை, ஆக. 15- பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்திக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் : தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி கோருகிறார்
14 Aug 2022சென்னை : சென்னையில் இருந்து நாளை 16-ம் தேதி இரவு முதல்வர் மு.க.
-
75-வது சுதந்திர தினம்: தலைவர்கள் வாழ்த்து
14 Aug 2022சென்னை ; நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க.
-
பிரீமியர் லீக் கால்பந்து போட்டி: மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வி
14 Aug 2022பிராண்ட்போர்ட் : 2022- 23 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.இதில் பிரண்ட்போர்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் பிரண்ட்போர்ட் - மான்ச
-
சென்னை அருகே துயர சம்பவம் : கடலில் குளித்து கொண்டிருந்த 4 பேர் அலையில் சிக்கி மாயம்
14 Aug 2022சென்னை ; திருவொற்றியூரில் கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
-
ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்திய பெண்களை விரட்டியடித்த தலிபான்கள்
14 Aug 2022காபூல் ; காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலிபான்கள் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டதிட்டங்கள் அமலில் உள்ளன.
-
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் தோனி ஆலோசகராக செயல்பட பிசிசிஐ மறுப்பு?
14 Aug 2022மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது.
-
20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர் - ரிக்கி பாண்டிங்
14 Aug 2022புதுடெல்லி : 20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.
-
அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
14 Aug 2022மதுரை : மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-14-08-2022
14 Aug 2022 -
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா- மேடிசன் இணை அரையிறுதியில் தோல்வி
14 Aug 2022ஒட்டாவா : ஒட்டாவா, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.
-
சரோஜ் நாராயணசாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
14 Aug 2022சென்னை : பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகல்
14 Aug 2022வாஷிங்டன் : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகி இருக்கிறார்.
-
பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி
14 Aug 2022ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
கேலோ இந்தியா யு-16 மகளிர் ஹாக்கி லீக் போட்டி ஆகஸ்ட் 16-ம் தேதி தொடக்கம்
14 Aug 2022புதுடெல்லி : கேலோ இந்தியா 16 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஹாக்கி லீக் டெல்லியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி யு -16 மகளிர் ஹாக்கி லீக் முதல் கட்ட போட்டிகள் வரு
-
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிமோனா ஹாலேப்
14 Aug 2022டொரண்டோ : கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.
-
சென்னையில் காந்தியின் திருவுருவ சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
14 Aug 2022சென்னை : தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை இன்று காலை 10.30 மணியளவில்
-
சல்மான் ருஷ்டியை தொடர்ந்து ஹாரி பாட்டர் எழுத்தாளருக்கும் டுவிட்டரில் கொலை மிரட்டல்
14 Aug 2022லண்டன் ; அமெரிக்காவில் ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
14 Aug 2022புதுடெல்லி பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என சுதந்திர தின உரையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறி உள்ளார்.
-
பீகாரில் நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு? - காங்கிரசுக்கு 4 மந்திரிகள்
14 Aug 2022பாட்னா : பீகாரில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாகவும், காங்கிரசுக்கு நான்கு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கோலாகலம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசிய கொடியேற்றுகிறார் : முப்படை தளபதிகள் உட்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு
14 Aug 2022புதுடெல்லி : டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைக்கிறார்.
-
75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டம்: அமெரிக்காவில் தேசிய கொடியை ஏற்றும் இந்திய போர்க்கப்பல்
14 Aug 2022புதுடெல்லி : நாடு முழுவதும் இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
-
அமெரிக்காவில் விமானத்தை இயக்கி அசத்திய தாய், மகள் வலைதளங்களில் வீடியோ வைரல்
14 Aug 2022வாஷிங்டன் ; அமெரிக்காவில் பைலட்டுகளாக பணிபுரியும் தாய், மகள் இருவரும் இணைந்து விமானம் ஓட்டி அசத்தி இருக்கிறார்கள்.
-
புதுமண தம்பதிகளுக்கு நூதன பரிசு தொகுப்பு : ஒடிசா அரசு முடிவு
14 Aug 2022புவனேசுவரம் : ஒடிசாவில் அடுத்த மாதம் முதல் புதுமண தம்பதியருக்கு அரசு சார்பில் நூதன பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.