முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      தமிழகம்
Stelin 2022 02 23

Source: provided

சென்னை : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது, 

தமிழகத்தை சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால்  3-7-2022 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும். 

15-6-2022 அன்று முடிவடைந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மேலும்  மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

ஆகவே இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து