முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு 8ம் தேதி வரை சிறை இலங்கை நீதிமன்றம் உத்தரவு

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      உலகம்
Fishing-boat 2022 01 23

இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களுக்கு 8ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களுக்கும் வருகிற 8ம் தேதி வரை சிறையில் அடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து