முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் 300 யூனிட் மின்சாரம் இலவசம் ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி

வியாழக்கிழமை, 21 ஜூலை 2022      இந்தியா
aravind-gejriwal-----------2022-07-21

Source: provided

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, தற்போது குஜராத் மாநிலத்திலும் வெற்றி பெற கவனம் செலுத்தி வருகின்றது. குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவால் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று சூரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை அறிவித்தார்.

வாக்குறுதி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது., ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அனைத்து வீடுகளுக்கும் மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையிலான அனைத்து மின் கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும். 24 மணிநேரமும் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் மின் விநியோகிக்கப்படும எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து