முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      தமிழகம்
bus-special-2022-08-09

Source: provided

சென்னை : இன்று முதல் 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனிடையே இன்றும் மற்றும் நாளையும் வார இறுதி விடுமுறை என்பதால், அடுத்த 3 நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக உள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் பணியாற்றும் பிற ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அவ்வாறு சென்னையில் பிற ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்காக போதுமான பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து