எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
75-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
75 ஆண்டுகள்...
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனால் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் வருகிற 15-ந்தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இந்த விழாவையொட்டி இதுவரை இல்லாத வகையில் டெல்லி நகரில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இம்மாத தொடக்கத்தில் இருந்தே விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சோதனைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
பயங்கரவாதிகள் சதி...
செங்கோட்டை மற்றும் விழா நடைபெறும் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி செயல்களில் ஈடுபடலாம் என்று அச்சுறுத்தல் நிலவுவதால் டெல்லி மாநகர் முழுவதும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் டெல்லி நகருக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறது.
போலீசார் சோதனை...
டெல்லியில் உள்ள ஓட்டல்கள், விருந்தினர் மாளிகைகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், உணவகங்கள்,வணிக வளாகங்கள், முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளன. தங்கும் விடுதிகளில் நாசவேலை கும்பல் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிவதற்காக போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையிலும் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய வீதிகளில் உயர்ரக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சாதாரண உடைகளிலும் போலீசார் நகர் முழுவதும் சுற்றி வருகிறார்கள்.
உஷார் நிலையில்....
சுதந்திர தினம் முடியும் வரை பட்டங்கள் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி இந்திய எல்லை பகுதியும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது டிரோன்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் பறந்து வருகிறது. இதனை சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. எல்லையில் ராணுவ வீரர்களுடன் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.
மத்திய அரசு எச்சரிக்கை...
சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர் குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபடலாம் என்றும், எனவே மாநில அரசுகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு பணியில்...
தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பிறப்பித்து உள்ளார்.
தீவிர வாகன சோதனை...
இதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே தண்டவாளங்கள், கோவில்களை சுற்றி உள்ள இடங்கள் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
16-ந்தேதி வரை...
இந்த சோதனையின் போது சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேக நபர்களின் முகவரிகளை வாங்கி அவர்கள் பற்றிய முழு தகவல்களையும் போலீசார் திரட்டி விசாரித்து வருகிறார்கள். சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் 24 மணி நேரமும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு பணிகளை வருகிற 16-ந்தேதி வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
20 ஆயிரம் போலீஸ்...
சென்னையில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும், ராஜாஜி சாலையை போலீசார் கடந்த 6-ந்தேதி முதல் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் கடந்த 3 நாட்களாக போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீசார் தீவிர வாகனச் சோதனையும் செய்து வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் சுமார் 20 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
7 அடுக்கு பாதுகாப்பு...
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு வருகிற 20-ந்தேதி வரை நீடிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் உள்ளிட்ட திரவ பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் பல கட்ட சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
5 அடுக்கு பாதுகாப்பு...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவதையொட்டி அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் அங்கு போலீஸ் கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இரவு பகலாக வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உடனடி நடவடிக்கை...
சுதந்திர தினத்தையொட்டி, வன்முறையை தூண்டும் வகையிலும், மதம் மற்றும் ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையிலும் பதியப்படும் கருத்துகளை தடுக்கும் வகையில் சைபர் குற்றப்பிரிவினரும், உளவுத்துறையினரும் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
29 Oct 2025சென்னை : மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
-
தற்போது பிரதமர் பதவியோ, பீகார் முதல்வர் பதவியோ காலியாக இல்லை : பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு
29 Oct 2025பாட்னா : பீகார் முதல்வர் பதவியும், பிரதமர் பதவியும் தற்போது காலியாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க ரூ.48.33 கோடியில் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு அமைப்பு
29 Oct 2025சென்னை : பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
-
கோவில் சொத்து விவரங்கள்; 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
29 Oct 2025சென்னை : கோவில் சொத்து விவகாரம் குறித்து 2 வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
துபாயில் திகிலூட்டும் வடிவிலான உணவு வகைகள் விற்பனை
29 Oct 2025துபாய் : துபாயில் திகிலூட்டும் வடிவிலான உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்யபடுகின்றன.
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல்
29 Oct 2025வாஷிங்டன் : 300 கி.மீ. வேகத்தில் ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல் குறித்து உசேன் போல்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தங்கம் வென்ற கபடி வீரருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார் திருமாவளவன்
29 Oct 2025சென்னை : தங்கம வென்ற கபடி வீரருக்கு திருமாவளவன் ரூ.50 ஆயிரம் வழங்கி வாழ்த்தியனார்.


