எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் உடல் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இறுதி மரியாதை செய்தனர்.
4 பேர் வீர மரணம்...
காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவ முகாமில் வியாழக்கிழமை காலை தீவிரவாத தாக்குதல் நடந்தது. அப்போது, இந்திய ராணுவத்தினர் எதிர்தாக்குதல் நடத்தியபோது, இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரும், தீவிரவாதிகள் 2 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்திய வீரர்கள் 3 பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர், மதுரை மாவட்டம், திருமங்கலம்- உசிலம்பட்டி செல்லும் சாலையில் உள்ள து.புதுப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தர்மராஜின் 2வது மகன் லட்சுமணன் (25).
பயங்கரவாதிகள் தாக்குதல்...
பிபிஏ முடித்த லட்சுமணன் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்துள்ளார். துப்பாக்கி சுடும் போட்டியில் ஏற்கெனவே திறமை வாய்ந்தவர் என்பதால், ராணுவத்திலும் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தான் காஷ்மீர் பகுதியில் ராணுவ முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, பயங்கரவாதிகள் தாக்குதலில் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார்.
மதுரை வந்தது...
முன்னதாக லட்சுமணின் உடல் நேற்றஉ காலை ஐதராபாத் வந்தடைந்தது. அங்கிருந்து விமானம் மூலம் நேற்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர்கள் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித்சிங் கலோன், காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலி...
அதைத்தொடர்ந்து ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பொற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும், தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய்கான காசோலை லட்சுமணனின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.
21 குண்டுகள் முழங்க...
பின்னர் லட்சுமணின் உடலுக்கு 21 ராணுவ குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. இறுதிச்சடங்குகள் முடிந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுடன் அவருக்குப் பிரியமான கிரிக்கெட் மட்டையும் வைக்கப்பட்டது. அவர் உடலில் போர்த்தியிருந்த தேசியக் கொடி அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
தந்தை உருக்கம்...
லட்சுமணனின் வீரமரண செய்தி வந்தவுடனேயே அவரது தந்தை தர்மாஜ், ‘‘எனது இரு மகன்களையும் ராணுவத்தில் சேர்க்க திட்டமிட்டேன். லட்சுமணனுக்கு முதலில் வாய்ப்பு கிடைத்து சென்றார். அவர் முழுமையாக பணிபுரிய முடியாமல் போனது வருத்தம் என்றாலும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்திருப்பதை பெருமையாகவே கருதுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் எனது இன்னொரு மகனையும், ராணுவத்திற்கு அனுப்புவேன். லட்சுமணன் விட்டுச் சென்ற பணியை மூத்த மகன் நிறைவு செய்வான்’’ என்று கூறியிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்
27 Jan 2026மதுரை: ஜெயலலிதா ஆட்சி அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
27 Jan 2026சென்னை, வரும் 02.02.2026 மற்றும் 03.02.2026 அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026" தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படவுள்ளத
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று ஆரம்பம்
27 Jan 2026டெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
கும்பகோணத்தில் இன்று நடைபெறும் இ.யூ.மு.லீக் மாநாட்டில்பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
27 Jan 2026சென்னை, கும்பகோணத்தில் இன்று (ஜன.28) நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் போராட்டம்; 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
27 Jan 2026மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
-
சென்னை, கிண்டியில் ரூ.417 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான மருத்துவமனை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
27 Jan 2026சென்னை: சென்னை கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி, இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
கதாநாயகியாக இருக்கும்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து தஞ்சையில் கனிமொழி எம்.பி. பேச்சு
27 Jan 2026தஞ்சாவூர், தி.மு.க.
-
தே.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன்: த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் விளக்கம்
27 Jan 2026சென்னை: த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி.தினகரன் விரும்பினார் என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
-
தென்தமிழகத்தில் ஐந்து நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
27 Jan 2026சென்னை: தென்தமிழகத்தின் வரும் பிப்.1 வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்கும்படி கோரிக்கை
27 Jan 2026டெல்லி, பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
-
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
27 Jan 2026சென்னை, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.
-
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Jan 2026சென்னை, பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு என்று உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது என்ற
-
கர்நாடகா மாநிலத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: சித்தராமையா, சிவக்குமார் கைது
27 Jan 2026பெங்களூரு: கர்நாடகாவில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
த.வெ.க.வுடன் ராமதாஸ் கூட்டணியா?
27 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி: இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ வர்த்தக ஒப்பந்தம் முடிவானது: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒப்பந்தங்களின் தாய் வர்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
27 Jan 2026- நெல்லை நகரம் லட்சுபி நரசிங்க பெருமாள் வருசாபிசேகம்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தந்த பல்லக்கு, மாலை தங்க குதிரை வாகனம், அம்பாள் தங்க பல்லக்கு
-
இன்றைய ராசிபலன்
27 Jan 2026 -
இன்றைய நாள் எப்படி?
27 Jan 2026


