முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டு ஆண்டுகள் நிறைவு: எம்.எஸ்.டோனி ஓய்வை சிறப்பிக்கும் விதமாக பதிவிட்ட வீடியோ ஐ.சி.சி.

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
ICC 2022-08-15

Source: provided

சென்னை : எம் எஸ் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன.

By - தினத்தந்திUpdate: 2022-08-15 14:31 GMT

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டோனி ஓய்வை அறிவித்து 2 ஆண்டுகள்  நிறைவு! ஐசிசி பதிவிட்ட வீடியோ

2 ஆண்டுகள்...

எம் எஸ் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்து நேற்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (19:29) தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி. இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டியில், டோனி கப்தில் வீசிய பந்தால் ரன் அவுட் ஆகி கண் கலங்கி மைதானத்தை விட்டு வெளியேறியதிலிருந்தே அவர் அதன்பின் பல போட்டிகளில் பங்குபெறவில்லை.

திடீர் அறிவிப்பு...

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், டோனி 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இரவு 7.30 மணியளவில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். டோனி இந்திய அணியிலிருந்து விலகி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டாலும் இன்றும் அவரை கேப்டனாக எண்ணும் வீரர்கள் உள்ளனர். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீடியோ பதிவிட்டு சிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து