முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகள் கொரோனா நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் : விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      இந்தியா
Air-India 2022-08-17

Source: provided

புதுடெல்லி : கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் பயணிகள் விமானங்களுக்குள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவதை விமான நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி விமான பயணிகள் பயணம் முழுவதும் முக கவசங்களை அணிதல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக விமான நிறுவனங்களால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து