எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 45.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். அகேல் ஹுசைன், அல்ஸாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி, 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷமர் புரூக்ஸ் 79 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2014-க்குப் பிறகு நியூசிலாந்து அணியை ஒருநாள் கிரிக்கெட்டில் தோற்கடித்துள்ளது. மேலும் கடந்த 10 ஒருநாள் ஆட்டங்களில் மே.இ. தீவுகள் அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. மார்ச் 2020-க்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி இழந்துள்ளது. 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
___________
பீனிக்ஸ் பிரக்ஞானந்தா:
3-வது சுற்றில் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா. முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் பிரபல வீரர் அனிஷ் கிரியை 2.5-1.5 என வீழ்த்தினார். 3-வது சுற்றில் அமெரிக்காவின் பிரபல வீரரான ஹான்ஸ் நீமன்னை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. கார்ல்சனுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று பிறகு தோற்ற நீமன், பிரக்ஞானந்தாவுக்கு எதிராகவும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.
அடுத்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சமன் செய்தார். 3-வது ஆட்டம் டிரா ஆனது. 4-வது ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று 2.5-1.5 என ஹான்ஸ் நீமன்னை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.உலக சாம்பியன் கார்ல்சன் 2.5-1.5 என பிரபல வீரர் லெவோன் ஆரோனியனை வீழ்த்தினார். 8 வீரர்கள் விளையாடும் இந்தப் போட்டியில் 9 புள்ளிகளுடன் கார்ல்சனுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. 4-வது சுற்றில் லெவோன் ஆரோனியனை அவர் எதிர்கொள்கிறார்.
____________
இன்ஸ்டாகிராமில் கணவர் பெயரை
பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக தற்போது திகழ்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனஸ்ரீ வர்மா சமூக வலைத்தளங்களில் மிகவும் 'ஆக்ட்டிவாக' இருப்பவர். இவர் பதிவிடும் நடன வீடியோக்களை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் 'தனஸ்ரீ சஹால்' என்ற பெயருடன் தனஸ்ரீ தனது சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது தனது கணவரின் பெயரை நீக்கி மீண்டும் தனஸ்ரீ வர்மா என மாற்றியுள்ளார். இதை தொடர்ந்து சஹால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "புதிய வாழ்க்கை தயாராகிறது" என பதிவிட்டு இருந்தார். பிரபல நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவை பிரியும் முன்பு சமூக வலைதள கணக்குகளில் இருந்து அகினேனியை நீக்கினார். இதனால் சஹால்- தனஸ்ரீ வர்மா இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிகிறார்களா என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
___________
சென்னை ஓபன் டென்னிஸில்
முன்னணி வீராங்கனைகள்..!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் வரும் செப்டம்பர் 12 முதல் 18 வரை சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு வீராங்கனைகளின் பட்டியலை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஒற்றையர் பிரிவில் மொத்தம் 32 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
உலகத் தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அலிசன் ரிஸ்க், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் (33-வது இடம்), பிரான்ஸின் கரோலின் கார்சியா (35), ரஷ்யாவின் வார்வரா கிராச்சேவா (60), போலந்தின் மேக்டா லினெட் (70), சுவீடனின் ரெபேக்கா பீட்டர்சன் (87), ஜெர்மனியின் தட்ஜானா மரியா (93), சீனாவின் கியாங் வாங் (103), பிரான்ஸின் க்ளோ பாகுட் (111), கனடாவின் ரெபேக்கா மரினோ (113), ஜப்பானின் மோயுகா உச்சிமா (131), ரஷ்யாவின் ஒசானா செலக்மேதவா (145), அனா பிளின்கோவா (151), அனஸ்டசியா கஸநோவா (156), செக்குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா (157), போலந்தின் கதர்சினா காவா (160), பெல்ஜியத்தின் யானினா விக்மேயர் (162), அன்டோராவின் விக்டோரியா ஜிமினெஸ் (165), நெதர்லாந்தின் அரியன்னே ஹார்டோனோ (166), சுவிட்சர்லாந்தின் ஜோன் ஜுகர் (167), பிரிட்டனின் கேட்டி ஸ்வான் (177) ஆகியோர் சென்னை ஓபனில் களமிறங்குகின்றனர்.
_______________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி?
19 Dec 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்: 2 நாட்களில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்
19 Dec 2025நெல்லை, நெல்லையில் இன்றும், நாளையும் (டிச.20, 21ல்) முதல்வர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
தமிழ்நாட்டில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி: 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடி நீக்கம்
19 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார், இதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வரைவு வாக்க
-
சேலத்தில் டிசம்பர் 30-ம் தேதி த.வெ.க.வின் பொதுக்கூட்டம்? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
19 Dec 2025சேலம், ஈரோட்டில் த.வெ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-12-2025.
19 Dec 2025 -
100 நாள் வேலை திட்ட விவகாரம்: வரும் 24-ம் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
19 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் வரும் 24-ம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங
-
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு இன்று முதல் தடை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்
19 Dec 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்
-
சென்னையில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம்
19 Dec 2025சென்னை, சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
19 Dec 2025சென்னை, கலசப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆலோசனை நடத்தினார்.
-
அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
19 Dec 2025பிரசல்ஸ், அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு 90 பி. யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் டிச.22-ல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
19 Dec 2025சென்னை, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி அமைச்சர்கள
-
செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
19 Dec 2025சென்னை, செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
என்னை வளர்த்தெடுத்த ஆசான்: பேராசிரியர் அன்பழகனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
19 Dec 2025சென்னை, என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர் என்று பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தொடர் வெற்றிகளை பே
-
பீகார் ஹிஜாப் சர்ச்சை: அரசு வேலையை உதறிய பெண்..!
19 Dec 2025பீகார் ஹிஜாப் சர்ச்சையால் அரசு வேலையை வேண்டாம் என்ற புறக்கணித்த பெண் டாக்டர், பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு சென்றதாக தகவல் வெளியாகி
-
43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 125 புதிய மின்சாரப் பேருந்துகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
19 Dec 2025பூந்தமல்லி மின்சாரப் பேருந்து பணிமனை மற்றும் புதிதாக 125 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியசைத்து த
-
செவிலியர் பணிக்கு காலி இடங்கள் தற்போது இல்லை: அமைச்சர் தகவல்
19 Dec 2025சென்னை, செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 152 விமானங்கள் ரத்து
19 Dec 2025புதுடெல்லி, பனிமூட்டம் காரணமாக டெல்லியில் நேற்று 79 விமானங்களின் புறப்பாடு மற்றும் 73 விமானங்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: பிரதமர் மோடி குறித்து அமெரிக்கா பெருமிதம்
19 Dec 2025சென்னை, இந்தியாவில் ஒரு நண்பர் இருப்பதாக பிரதமர் மோடியின் படத்தை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.
-
ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உலக சாதனை படைத்த கான்வே - லதாம் ஜோடி
19 Dec 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன் குவித்த தொடக்க ஜோடி என்ற உலக சாதனையை கான்வே - லதாம் இணை படைத்துள்ளது.
-
தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
19 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது. அதன்படி தங்கம் 1 கிராம் ரூ.12,380-க்கும், சவரன் ரூ.99,040-க்கும் விற்பனையானது.
-
ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகளை ஜனவரி 5 - க்குள் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் கெடு
19 Dec 2025சென்னை, ரோடு ஷோ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
டிராவிஸ் ஹெட் அபார சதம்: 356 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் ஆஸி.,
19 Dec 2025அடிலெய்டு, டிராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் 356 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
-
சாந்தி மசோதா நிறைவேற்றம்: தொழில்நுட்பத்துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தும்: பிரதமர் மோடி
19 Dec 2025டெல்லி, இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் சாந்தி மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி ப
-
துணை ராணுவம் திடீர் தாக்குதல்: சூடானில் 16 பேர் பலி
19 Dec 2025கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சூடானில் உள்ள தெற்கு கார்டூமின் மாகாணம் டில்லிங் பகுதியில் துணை ராணுவப்படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.
-
வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடியவிடிய தர்னா
19 Dec 2025புது டெல்லி, வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 மணி நேரம் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


