முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை அறிக்கை தாக்கல் : சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      தமிழகம்
ADMK 2022 09 02

Source: provided

சென்னை : அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த மோதல் குறித்து விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஐகோர்ட்டில் இன்று அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர். 

அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற வன்முறை மற்றும் மோதல் தொடர்பாக அக்கட்சியின் அலுவலகத்திற்கு  இரண்டு முறை நேரில் சென்று விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலீசார் அப்போது தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்தனர்.

இதனை தொடர்ந்து கட்சியின் தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடமும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின்  ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.  இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் வாக்குமூலம் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவான அறிக்கையாக தயாரித்துள்ளனர். 

இந்த நிலையில் அலுவலக மோதல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மோதல் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து