எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
'கிராண்ட் பிரிக்ஸ்' மோட்டார் சைக்கில் ரேசிங் எனப்படும் மோட்டோஜிபி பைக் பந்தயம் போட்டி சர்வதேச அளவில் பிரபலம் ஆகும். இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான மோட்டோஜிபி உலக சாம்பியன்ஷிப் பைக் பந்தய போட்டியை நடத்தும் வாய்ப்பை முதல் முறையாக இந்தியா பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான மோட்டோஜிபி உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் 'கிராண்ட் பிரிக்ஸ் ஆப் பாரத்' என்ற பெயரில் நடத்தப்பட உள்ளது.
2022 மோட்டோ ஜிபி உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான பந்தயங்கள் நொய்டா நகரில் உள்ள புத்தா சர்வதேச சர்க்கியூட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 19 நாடுகளை சேர்ந்த பைக் ரேஸ் பந்தய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 'மோட்டோஜிபி' உலக சாம்பியன்ஷிப் பைக் பந்தய போட்டிகள் அடுத்த ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
______________
ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா சாதனை
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இதற்கு முன்பு இரண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இந்த சாதனையைப் படைத்திருந்தார். அவர் 88 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினார். ஆனால் ஸ்மிருதி மந்தனா 76 போட்டிகளில் இந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். இதனால் மகளிர் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி பெற்றார்.
ஒட்டுமொத்தமாக ஒப்பிடும்போது ஷிகர் தவான், விராட் கோலிக்கு பிறகு ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றுள்ளார். ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினர். ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட்டில் 22 வீராங்கனைகள் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர். இதில் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். முதலிடத்தை பெலின்டா கிளார்க் (62 போட்டிகள்), இடண்டாவது இடத்தை மெக் லேன்னிங் (64 போட்டிகள்) ஆகியோர் பெற்றுள்ளனர்.
____________
இந்திய தடகள வீராங்கனை பூவம்மாவுக்கு 2 ஆண்டு தடை
கடந்த ஆண்டு பிப்ரவரியில் பாட்டியாலாவில் நடைபெற்ற இந்திய கிராண்ட் ப்ரீ 1 தடகள போட்டியின்போது பூவம்மாவிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்தன. அதில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பால் (டபிள்யூஏடிஏ) தடைப் பட்டியலில் சோ்க்கப்பட்டிருந்த மருந்தை பூவம்மா பயன்படுத்தியதாகத் தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் ஊக்கமருந்து தடுப்பு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பூவம்மாவுக்கு 3 மாத தடை விதித்தது.
அதற்கு எதிராக தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு மேல் முறையீடு செய்ததன் பேரில் தற்போது பூவம்மாவுக்கான தடைக் காலத்தை ஊக்கமருந்து தடுப்பு மேல்முறையீட்டு குழு 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதனிடையே ஊக்கமருந்து பயன்பாடு உறுதியானதால், பூவம்மா கடந்த மாா்ச் மாதம் இந்திய கிராண்ட் ப்ரீ 1 மற்றும் 2-இல் வென்ற இரு வெள்ளிப் பதக்கங்கள், ஏப்ரலில் ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்படவுள்ளன.
_____________
டி20 கிரிக்கெட்டில் அதிகவேகமாக 2000 குவித்து கேஎல் ராகுல் சாதனை
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மொகாலியில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார்.
இந்த போட்டியில் இந்திய அணியில் துவக்க வீரராக விளையாடிய கே.எல் ராகுல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அவர் 35 பந்துகளில் மூன்று சிக்சர் மற்றும் நான்கு பவுண்டரி என 55 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை அவர் கடந்தார். இதுவரை டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரராக பாபர் அசாம் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை அடித்தார்.
______________
கப்தில் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2022ம் ஆண்டில் 17 டி20 போட்டிகளில் 423 ரன்கள் அடித்துள்ளார். இதில் 21 சிக்சர்களும் அடங்கும். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் ஒரு சிக்சர் அடங்கும். இதன்மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 172 சிக்சர்கள் அடித்து கப்தில் சாதனையை சமன் செய்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் 172 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நடைபெறும் டி20 தொடரில் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் விளாசி முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி திருச்சி பயணம்
06 Nov 2025புதுக்கோட்டை, திருச்சி - புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார்.
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை: தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
06 Nov 2025சென்னை, வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.,யில் மாணவிகளுக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார்
06 Nov 2025கொடைக்கானல், அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தமிழக கவர்னர் ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
-
பீகாரில் வாக்குத்திருட்டை தடுப்பது இளைஞர்களின் பொறுப்பு: ராகுல்
06 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் பா.ஜ.க. வாக்குகளைத் திருட முயற்சிக்கும் அதனை தடுக்க இளைர்களின் பொறுப்பு என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
06 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டியுள்ளது என்று தெரிவித்த அ.தி.மு.க.
-
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டம்
06 Nov 2025சென்னை, வார விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.
-
முதல்வரின் பெருந்தன்மையை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்: சபாநாயகர் அப்பாவு பேட்டி
06 Nov 2025நெல்லை, முதல்வரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் என்று தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, முதல்வரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்ற
-
பா.ஜ.க.வின் போராட்டம் அரசியலுக்கான வேடம் : அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்
06 Nov 2025சென்னை, தி.மு.க. அரசில் குற்றம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பா.ஜ.க.
-
பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்
06 Nov 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பேட்டி
06 Nov 2025சென்னை, அன்பு மணியை அமைச்சராக்கியது தவறு என்று ராமதாஸ் கூறினார்.
-
மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை
06 Nov 2025சென்னை: மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாட திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அமைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு: துணை முதல்வர் உதயநிதி தகவல்
06 Nov 2025சென்னை, 2016 தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பெண்ணை தாக்கியதாக ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு
06 Nov 2025தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது: சீமான்
06 Nov 2025சென்னை, எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரத்திற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி: கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் - ட்ரம்ப் திட்டவட்டம்
06 Nov 2025வாஷிங்டன்: தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
தேர்தலில் தோற்றால் கட்சி பதவிகள் பறிப்பு: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
06 Nov 2025சென்னை, சங்கரன்கோவில், நெல்லை தி.முக. நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் தோற்றால்
-
ஜெர்மனியில் நடந்த கொடூரம்: நோயாளிகளை ஊசி போட்டு கொன்ற ஆண் செவிலியர்..!
06 Nov 2025பெர்லின்: ஜெர்மனியில் நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த ஆண் செவிலியரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி: டி.டி.வி. தினகரன் தகவல்
06 Nov 2025சென்னை, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
துரித அஞ்சல் கட்டணம் உயர்வு: செல்வப்பெருந்தகை கண்டனம்
06 Nov 2025புதுடெல்லி: பதிவு அஞ்சல் சேவை நிறுத்தம், துரித அஞ்சல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் மதுபானங்கள் பயன்பாடு 7 சதவீதம் உயர்வு
06 Nov 2025புதுடெல்லி: இந்தியாவில் மதுபானங்கள் பயன்படுத்துவது 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
-
நாசா தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமனம்
06 Nov 2025வாஷிங்டன்: நாசா தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
-
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம்
06 Nov 2025இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கியது.


