முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபேவின் நினைவு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: ஜப்பானில் பதாகைகளை ஏந்தி மக்கள் போராட்டம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      உலகம்
Japan 2022--09-24

Source: provided

டோக்கியோ : ஜப்பான் முன்னாள் பிரதமர் அபேவின் நினைவு நிகழ்ச்சி நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அரசை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்கிற பெருமைக்குரியவரான முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பங்கேற்றிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் அபேயின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜப்பானில் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு வருகிற 27-ம் தேதி அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. 

இந்த நிலையில் அபேவுக்கு அரசு நினைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நினைவு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  அபேவுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். 

அபேயும், அவரது அரசும் குறிப்பிட்ட ஒரு மத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டி மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷின்ஜோ அபேவுக்கு நினைவு நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து 70 வயது முதியவர் ஒருவர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து