முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதியோர் ஓய்வூதியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      தமிழகம்
OPS 2022-07-26

Source: provided

சென்னை: முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டுமென்று ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் நேரத்தில் கூறி தி.மு.க, ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்த நிலையில், தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்த பயனாளிகளில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் முதியோருக்கான ஓய்வூதியத்தை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளதாக வந்துள்ள செய்தி ஏழை, எளிய வருவாய் இல்லாத முதியோரை கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.  

முதியோர்கள் பெறுகின்ற ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால், அவர்கள் எல்லாம் அனாதை இல்லங்களை நோக்கிச் செல்லக் கூடிய அவல நிலைமை ஏற்படும்.  தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென்றும், தற்போது ஓய்வூதியம் பெறும் அனைத்துப் பயனாளிகளும் தொடர்ந்து முதியோர் ஓய்வூதியம் பெற வழிவகை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து