முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தியின் 39-வது நாள் நடைப்பயணம் தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022      இந்தியா
Rahul 2022--10-16

Source: provided

பெங்களூர் : கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தின் 39-வது நாள் யாத்திரை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. 

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 39-வது நாளாக, கா்நாடகத்தில் 15-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  பல்லாரி மாவட்டத்தின் சங்கனாகல் கிராமத்திலிருந்து நேற்று காலை 7 மணியளவில் நடைப்பயணம் தொடங்கியது. 

கடந்த சில நாள்களுக்கு முன் நடைப்பயணத்தின் இடையே மைசூரில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்ற போது, மழை கொட்டித் தீா்த்தது. அப்போது, மழையை பொருட்படுத்தாத ராகுல் காந்தி நனைந்தபடியே பொதுக் கூட்டத்தில், மழை எங்கள் நடைப்பயணத்தை நிறுத்த முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து