முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பிரதேச நடைபயணத்தில் ராகுலுடன் பிரியங்கா பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2022      இந்தியா
Rahul 2022-11-19

Source: provided

புது டெல்லி ; மத்திய பிரதேசத்தில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தில் பிரியங்கா காந்தியும் பங்கேற்க உள்ளார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 7-ம் தேதி முதல் மராட்டியத்தில் நடைபயணம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அவரது நடைபயணம் மராட்டியத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் உள்ள சேகாவ் கஜானன் ததா பாட்டீல் மார்க்கெட் யார்டில் இருந்து தொடங்கியது. இரவில் ஜல்காவ் மாவட்டத்தை நடைபயணம் சென்றடைந்தது. 

நேற்று 74-வது நாளாக பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ராகுல்காந்தி தனது நடைபயணத்தை தொடங்கி உள்ளார். நேற்றுடன் மராட்டியத்தில் நிறைவு பெற்றுள்ள அவரது நடைபயணம் இரவில் மத்திய பிரதேச மாநிலத்தில் பயணிக்க உள்ளது. இந்த நிலையில், மத்தியபிரதேசத்தில் நடைபெறும் நடைபயணத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளார். வரும் 23-ம் தேதி முதல் 25 வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் அவர் பங்கேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து