முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் புதிய வளிமண்டல சுழற்சிக்கு வாய்ப்பு: தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      தமிழகம்
Rain 2022-11-24

Source: provided

சென்னை: வங்கக் கடலில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவிழந்ததால் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

எதிர்பார்த்த கனமழை, மிக கனமழை எச்சரிக்கை விலக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட வடதமிழகத்தில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அதிகபட்சமாக 10.செ.மீ, திருத்தணி, காஞ்சிபுரம் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அடுத்து அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். பெரிய அளவில் மழை இருக்க வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுமா என்பது அடுத்த ஓரிரு நாட்களில் தெரியவரும். ஆனாலும் தமிழகத்தில் வரும் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து