முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. நிர்வாகி தீக்குளித்து தற்கொலை : மு.க.ஸ்டாலின் இரங்கல்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : இந்தித் திணிப்பிற்கு எதிராக தாழையூரைச் சேர்ந்த தி.மு.க. விவசாய அணி முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் தங்கவேல் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன். இடியென வந்த செய்தியால் கலங்கித் தவிக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச சேர்ந்த தி.மு.க.  விவசாய அணி முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் தங்கவேல், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்.  இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம்.  

இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல் ரீதியாக,  ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்.  ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்து விட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது.  போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.  

பன்முகத்தன்மைக் கொண்ட அழகிய நாட்டைக் குறுகிய மனப்பான்மையால் குலைத்திட வேண்டாம்.  இந்தியைத் திணிக்காதே எனக் காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை.  தாழையூர் தங்கவேலு அவர்களது குடும்பத்துக்கும், கட்சியின் உடன்பிறப்புகளுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து