எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 9 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து கனிட்கர் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார்.
இந்தியாவுக்காக 2 டெஸ்ட் மற்றும் 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தர போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் இவர் குவித்திருக்கிறார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரர் ரமேஷ் பவாரை நேஷனல் கிரிக்கெட் அகாடெமிக்கு பிசிசிஐ மாற்றம் செய்துள்ளது
---------------
வங்கதேச 'ஏ' அணிக்கு எதிராக முகேஷ் அபாரம்
இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக செளராஷ்டிர முன்னாள் வீரர் ஷிதான்சு கொடாக்கும் டிராய் கூலி, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் டி. திலீப்,ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
இந்நிலையில் 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரின் அபாரமான பந்துவீச்சில் வங்கதேச பேட்டர்கள் தடுமாறினார்கள். ஷஹாதத் ஹுசைன், ஜேக்கர் அலி மட்டும் நன்கு விளையாடி முறையே 80, 62 ரன்கள் எடுத்தார்கள். வங்கதேச ஏ அணி, 80.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்காலைச் சேர்ந்த 29 வயது முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
________________
ரமேஷ்பவார் பணியை மாற்றியது பி.சி.சி.ஐ.
2018 முதல் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார் ரமேஷ் பவார். எனினும் நடுவில் இரண்டரை வருடங்களுக்கு மற்றொரு முன்னாள் வீரரான டபிள்யூ.வி. ராமன் பயிற்சியாளராகப் பணியாற்றினார். இதன்பிறகு 2021 மே மாதம் முதல் இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் பவார் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரை, பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமிக்கு பணி மாற்றம் செய்துள்ளது பிசிசிஐ. நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக ரமேஷ் பவார் பணியாற்றுவார் என அகாதெமியின் தலைவர் விவிஎஸ் லஷ்மன் கூறியுள்ளார். இந்திய அணிக்காக 2004 முதல் 2007 வரை 2 டெஸ்டுகள், 31 ஒருநாள் ஆட்டங்களில் ரமேஷ் பவார் விளையாடியுள்ளார்.
________________
மெதுவான பந்துவீச்சு: இந்திய அணிக்கு அபராதம்
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர். இதனால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 80 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி. நடுவர் ரஞ்சன் மடுகல்லே நடவடிக்கை எடுத்தார்.
______________ __
இந்தியா - பாக். போட்டி குறித்து முன்னாள் வீரர் அப்ரிடி கருத்து
இந்திய அணி ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று அக்டோபரில் ஷா ஒரு வெடிகுண்டு வீசினார்.பிசிசிஐ உறுதியாக இருந்தால், உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்லாது என்று பாகிஸ்தான் எதிர்த்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் இருந்து விலகுவதாக மிரட்டல் விடுத்தார்.
இரு வாரியங்களுக்கு இடையேயான சண்டைக்கு மத்தியில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை குறித்து அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ஷாகித் அப்ரிடி கூறும் போது கிரிக்கெட் காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான உறவு எப்போதும் மேம்பட்டுள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியர்கள் பார்க்க விரும்புகிறார்கள்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026 -
16-வது நாளாக தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேர் கைது
11 Jan 2026சென்னை, சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
பிப்ரவரி 2-வது வாரத்தில் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
11 Jan 2026சென்னை, பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. முன்பாக இன்று ஆஜராகிறார் விஜய்
11 Jan 2026கரூர், கரூர் பெருந்துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை 7 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
-
இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்: கோவையில் நிதின் நபின் பேச்சு
11 Jan 2026கோவை, இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும் என்று கோவையில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியுள்ளார்.
-
சுவேந்து அதிகாரி தாக்கப்பட்டதாக புகார்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்
11 Jan 2026கொல்கத்தா, சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அதனைக் கண்டிக்கும் விதமாக, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.
-
தி.மு.க.வா? த.வெ.க.வா? கூட்டணி முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்..!
11 Jan 2026சென்னை, இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
மத்திய அரசை கண்டித்து முதல்வர் பினராயி தலைமையில் எல்.டி.எப் இன்று போராட்டம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி சத்தியாகிரகப்' போராட்டத்தை இன்ற
-
இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமராக இருப்பார்: அசாம் முதல்வர் ஹிமாந்தா பேச்சு
11 Jan 2026திஸ்பூர், இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.
-
கருக்கலைப்பு விவகாரம்: ஐகோர்ட் முக்கிய கருத்து
11 Jan 2026டெல்லி, கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



