எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கவர்னர் நேற்று தனது உரையில் 'திராவிட மாடல்', 'தமிழ்நாடு' போன்ற வார்த்தைகளை அதிகம் தவிர்த்தார். சட்டசபை கூடியதும் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் இருந்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் ஆா்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்கியது. சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. கவர்னர் ஆர். என். ரவி உரை நிகழ்த்துவதற்காக காலை 9.55 மணிக்கு பேரவைக்கு வருகை தந்தார். அவருக்கு பேரவை வாசலில் பேண்டு வாத்தியத்துடன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவர்னரை, பேரவைத் தலைவர் அப்பாவு, பேரவைச் செயலாளர்கள் சீனிவாசன் ஆகியோர் மரபுப்படி பேரவைக்குள் அழைத்து வந்தனர். சரியாக 10.01 மணிக்கு கவர்னர் அவைக்குள் வந்தார். அவர் வருவதற்கு முன்னதாகவே முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் அமர்ந்து இருந்தனர்.
கவர்னர் வந்ததும் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் இருக்கைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். உடனே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதையடுத்து கவரனர் ஆர்.என்.ரவி தமிழில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசினார்.
இதைத் தொடர்ந்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் வாழ்த்துகளையும் தமிழில் கூறினார். துண்டுச் சீட்டில் எழுதி வைத்திருந்த வாசகங்களை வைத்து தமிழில் வாழ்த்துகளை தெரிவித்தார்.
கவர்னர் தமிழில் தனது உரையை பேசத் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் இருக்கையை விட்டு கவரனர் அருகே வந்து அவர் முன்பு கோஷங்களை எழுப்பினார்கள்.
'வாழ்க வாழ்க தமிழ்நாடு' வாழ்கவே', எங்கள் நாடு தமிழ்நாடு... உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். சுமார் 8 நிமிடங்கள் அவர்கள் கையை உயர்த்தியபடி கோஷமிட்டனர். ஆனாலும் கவர்னர் அதை கண்டுகொள்ளாமல் தனது உரையை வாசித்துக் கொண்டு இருந்தார். கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பிய திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கவர்னரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதன்படி காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பும் வரை நின்று கொண்டிருந்த பாமக உறுப்பினர்களும் கோஷம் போடத் தொடங்கினார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய், மசோதாவிற்கு அனுமதி கொடுங்கள் போன்ற முழக்கங்களை எழுப்பினார்கள். ஒரு துண்டுச் சீட்டில் ஆங்கிலத்தில் எழுதிய வாசகங்களை கவர்னர் முன் ஏந்தி முழக்கமிட்டனர். அதன்பிறகு ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக உறுப்பினரும் கவர்னர் உரையை புறக்கணித்து பேரைவயில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் நேற்றைய பேரவைக் கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
33 இடங்களில் 'தமிழ்நாடு'
அரசு தயாரித்து அளித்த 8 பக்க கவர்னர் உரையில் உள்ள தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிப்பதைத் தவிர்த்த கவரனர் ஆர்.என்.ரவி, தமிழக மக்கள் போற்றும் முக்கிய தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா ஆகியோரின் பெயர்களையும் அவர் குறிப்பிடவில்லை. தமிழ்நாடு அரசு தயாரித்து கவரனர் ஒப்புதல் அளித்த 48 பக்கங்கள் கொண்ட உரையில் 33 இடங்களில் 'தமிழ்நாடு அரசு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு அணுகுண்டு மிரட்டல் விடுத்த ஈரான்
12 May 2024டெக்ரான் : இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்து உள்ளது.