எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இ.பி.எஸ். பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில், இ.பி.எஸ். தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கட்சி விதிகள் திருத்தம், இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு குறித்த தீர்மானங்களால் மனுதாரர் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்பதால் எந்த நிவாரணமும் கோர முடியாது. எனவே, பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து எட்டு மாதங்களுக்குப்பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது. எனவே, வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான, வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்குகள், நீதிபதி குமரேஷ் பாபு முன்பு நேற்று (மார்ச் 22) விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களின் விவரம் வருமாறு., ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல், விளக்கம் கேட்காமல், காரணம் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது நியாமற்றது. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை. தகுதி நீக்கம் செய்து விட்டு பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.
பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. ஒருங்கிணைப்பாளரை நீக்கம் செய்ய கட்சியில் எந்த விதியும் இல்லை. பிற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவதற்காகவே என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளது என எம்ஜிஆர். விதிகளை வகுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக தற்போது போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் நான் போட்டியிடத் தயார்; வழக்கையும் வாபஸ் பெறத் தயார்.. இவ்வாறு ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.
வாதங்கள் அனைத்தும் நிறைவு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது முதலில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் அடடுக்கடுக்காக வாதங்களை முன்வைத்தனர்.
அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்க்கும், வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அனைத்து தரப்பு வாதங்களும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பேச்சு
24 Jan 2026சென்னை, தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய் என்று தெரிவித்துள்ள செங்கோட்டையன், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
24 Jan 2026சென்னை, காவல்துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிப்பு
24 Jan 2026டெல்லி, 2026ம் ஆண்டுக்கான கலை, சமூகம், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
-
சத்துணவு, அங்கன்வாடி மற்றும் தூய்மை ஊழியர்களுக்கு பணி நிறைவு தொகை, ஓய்வூதியம் அதிகரிப்பு: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
24 Jan 2026சென்னை, சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும
-
வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ள துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
24 Jan 2026சென்னை, வரும் கல்வி ஆண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படவுள்ள நீட் தேர்வை கைவ
-
நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சு: அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க இங்கிலான்து பிரதமர் வலியுறுத்தல்
24 Jan 2026லண்டன், நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சுக்கு அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
-
நாளை குடியரசு தின விழா: சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை
24 Jan 2026சென்னை, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
துபாய் - சென்னை ஏர் இந்தியா விமான சேவை திடீர் நிறுத்தம்
24 Jan 2026சென்னை, 30 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டு வந்த சென்னை- துபாய் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.
-
டெல்லியில் ரோஜ்கார் மேளா: 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கினார்
24 Jan 2026புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் நடந்த ரோஜ்கார் மேளாவில் 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
-
தி.மு.க.வில் இணைகிறாரா..? அமைச்சர் சேகர்பாபு-ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
24 Jan 2026சென்னை, அமைச்சர் சேகர்பாபு - ஓ.பி.எஸ். சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –25-01-2026
24 Jan 2026 -
அமெரிக்காவில் பனிப்புயல் எச்சரிக்கை: ஜார்ஜியா, மேரிலேண்ட் உள்ளிட்ட 15 மாகாணங்களில் அவசரநிலை
24 Jan 2026ஜார்ஜியா, சுமார் 15 கோடி அமெரிக்க மக்களை பனிப்புயல் தாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்: சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்
24 Jan 2026சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
-
நாளை குடியரசு தின விழா: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை
24 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.
-
ஜெர்மனியில் பனிப்பொழிவால் சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு
24 Jan 2026பெர்லின், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
கவர்னர் உரையில் மாற்றுக் கருத்து இருந்தால் மத்திய அரசைதான் கவர்னர் கேள்வி கேட்க வேண்டும்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Jan 2026சென்னை, கவர்னர் உரையில் மாற்றுக் கருத்து இருந்தால், மத்திய அரசைத்தான் கவர்னர் கேட்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சென்னை மாநகராட்சி ஊழியர்களால் வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் குறித்து மேயர் விளக்கம்
24 Jan 2026சென்னை, வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் மாநகராட்சி அறிவிப்பாளர் செய்யப்பட்டது இல்லை.
-
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
24 Jan 2026ஜம்மு, காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவால் பனிக்கட்டிகள் மலைபோல் குவிந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
-
வருமானத்தை மறைத்ததற்காக அபராதம்: விஜய் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு தள்ளிவைப்பு
24 Jan 2026சென்னை, வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டம்
24 Jan 2026நியூயார்க், அமேசான் நிறுவனம் தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வரும் 27ம் தேதி முதல் சுமார் 14,000 முதல் 16,000 வரையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.&
-
வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் அனுமதி தேவையில்லை என்ற அரசாணைக்கு ஐகோர்ட் தடை
24 Jan 2026மதுரை, வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் முன் அனுமதி சான்று பெற தேவையில்லை என்ற அரசாணைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
துருக்கியில் நிலநடுக்கம்
24 Jan 2026அங்காரா, துருக்கியின் மேற்கே பலிகேசிர் மாகாணத்தில் சிந்திர்கி மாவட்டத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி
24 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 82 பேர் மாயமாகியுள்ளனர்.
-
அமெரிக்காவில் உறவினர்கள் மற்றும் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
24 Jan 2026ஜார்ஜியா, அமெரிக்காவில் மனைவி மற்றும் உறவினர்களை சுட்டுக்கொன்றதாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியலை தந்துள்ளோம்:நான் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்காக வாழ்கிறேன்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
24 Jan 2026சென்னை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால் ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான், மக்களுக்காகத் திட்டங்களை தீட்டினான், மாநிலத்தை வளர்த்தெடுத்தான் என்ற


