எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : ரயில் விபத்துகளை தடுக்க உதவக் கூடிய ‘கவாச்’ தொழில்நுட்பம் இருந்திருந்தால் ஒடிஷாவில் நிகழ்ந்த ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஒடிசா ரயில்கள் விபத்தில் 250-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயுள்ளன. 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் நடந்த 3 மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து இணைந்துள்ளது. இந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் தடுக்கும் ‘கவாச்’ (Kavach) என்ற தொழில்நுட்பம் விபத்து நடந்த பகுதியில் இல்லை என்ற தகவலை ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதுதான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன?
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் ரயில்கள் பாதுகாப்புக்காக முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான 'கவாச்'-ஐ அறிவித்தது. இதற்காக மத்திய அரசின் ரிசேர்ச் டிசைன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷனிற்கு மூன்று இந்திய நிறுவனங்கள் இதனை உருவாக்கிக் கொடுக்க, இந்திய ரயில்வே அதனை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. கவாச் என்ற சொல் கவசம் - பாதுகாப்பு என்பதைக் குறிப்பதாகும்.
கவாச் எப்படி செயல்படும்?
கவாச் தொழில்நுட்பமானது லோக்கோ பைலட்டுகள் என்றழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். எஸ்பிஏடி, சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர் எனப்படும் இந்த சமிக்ஞையானது ஒரே மார்க்கத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கும். மிகுந்த அடர்த்தியான பனி மூட்டம் இருக்கும்போது எதிரே ரயில் வந்தால் அலர்ட் செய்யும். எச்சரிக்கை செய்வதோடு மட்டுமல்லாமல், இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும்.
ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாமா?
இந்நிலையில் கவாச் தொழில்நுட்பம் இல்லாததால் தான் ஒடிசா ரயில் விபத்து நடந்ததாக எதிர்க்கட்சிகள் பலவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. விபத்துக்குள்ளான மூன்று ரயில்களில் எதிலும் கவாச் தொழில்நுட்பம் இல்லை என்று சொல்லப்படுவதால் அது பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கவாச் இருந்திருந்தால் இத்தகைய மிகப் பெரிய விபத்தை தவிர்த்திருக்கலாமா என்பது ஊகங்களின் வசமே விடக்கூடியதாக உள்ளது என்று தொழில்நுட்ப வல்லுநர்களே கூறுகின்றனர். காரணம், ஒடிசா விபத்து இந்திய ரயில் விபத்து வரலாற்றிலேயே மிகவும் சிக்கலானது.
ஒரு ரயில் தவறான பாதையில் மாறிச் சென்று நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதுகிறது. அந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு வேறொரு தண்டவாளத்தில் வந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மோதுகிறது. அந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரள்கின்றன. இப்படி மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், கவாச் இதில் எந்த அளவுக்கு உதவியிருக்கும் என்பது இதுபோன்ற விபத்துகளை அது தடுத்திருந்த முந்தைய சான்றுகள் இருந்தால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தாலும், இதுபோன்ற தொழில்நுட்பங்களை சுணக்கமின்றி செயல்படுத்த பரிந்துரைக்கின்றனர். எதிர்காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துப் பேரிடரில் பாடம் கற்கவும் உதவும் என்பதால்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சலில் கனமழைக்கு 3 பேர் பலி
30 Jun 2025சிம்லா, இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.