எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை அணியில் அறிமுகமான மதீஷா பதிரனா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் கைப்பற்றி 66 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதில், 16 வைடுகள் அடங்கும். சென்னை அணியில் இடம் பெற்றிருந்த பதிரனா அசத்தலான பந்து வீச்சால் சென்னை மக்களின் மனதை கவர்ந்தார். டி20-யில் பட்டைய கிளப்பிய பதிரனா, ஒருநாள் போட்டியில் சோதப்பியது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
________________
பிரெஞ்சு ஓபன்: 4-வது சுற்றுக்கு சிட்சிபாஸ், ஷபலென்கா தகுதி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 3-வது சுற்று ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த 26-ம் நிலை வீரரான டெனிஸ் ஷபவாலோவை எதிர் கொண்டார். இதில் அல்காரஸ் 6-1 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.அவர் 4-வது சுற்று ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள லாரன்சோ முசட்டியை (இத்தாலி) சந்திக்கிறார்.
5-ம் நிலையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவை சேர்ந்த டியாகோ ஸ்வார்ட்ஸ் மேனை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 3-வது வரிசையில் உள்ளவருமான ஜோகோவிச் (செர்பியா), செபாஸ்டியன் ஆப்னர் (ஆஸ்திரியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (ரஷியா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.
________________
வீராங்கனையின் துப்பாக்கியை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகள்
தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இன்று (ஜூன் 3-ந்தேதி) முதல் தொடங்கி நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த போட்டியில், தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான பிரியா திவாரி கலந்து கொள்ள முடிவு செய்து உள்ளார். உத்தர பிரதேசத்தின் லக்னோ நகருக்கு உட்பட்ட பி.ஜி.ஐ. காவல் நிலைய பகுதியில் பிருந்தாவன் காலனியில் அவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் அவரது கைத்துப்பாக்கியை திருடி சென்று உள்ளனர்.
இதுபற்றி அவரது சகோதரர், பிரதீப் குமார் போலீசில் புகார் அளித்து உள்ளார். அதில், பிரியாவின் அறை முதல் தளத்தில் உள்ளது. மொத்த குடும்பமும் தரை தளத்தில் கடந்த வியாழ கிழமை இரவில் படுத்து உறங்கியது. இந்நிலையில், திருடர்கள் பால்கனி வழியே முதல் தளத்திற்குள் புகுந்து, பிரியாவின் ஏர் கன் வகை கைத்துப்பாக்கி, லேப்டாப் மற்றும் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பிற பொருட்களை திருடி சென்று உள்ளனர் என புகாரில் தெரிவித்து உள்ளார்.
________________
சச்சினுடன் சுப்மன் கில்லை ஒப்பிடுவதா..? - முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ்டன் கேள்வி
இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் அபார திறமை கொண்ட இளம் வீரர் என்றும், அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவதில் நியாயமில்லை என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சுப்மன் கில் அபாரமான திறமை கொண்ட ஓர் இளம் வீரர். உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர். அவரது பயணத்தின் ஆரம்பத்திலேயே அவரை சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஒப்பிடுவது நியாயமற்றது.
இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் வெற்றிகரமாக ஆடும் திறன் அவரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். இந்த காலகட்டத்தில், குறிப்பாக டி20 கிரிக்கெட் மிகவும் வேகமாக முன்னேறி வரும்போது, அத்தகைய திறனை நீங்கள் பெரும்பாலும் பார்க்க முடியாது. இந்த ஐபிஎல் சீசனில் அவர் தனது பலத்தையும், அவற்றை ஒவ்வொரு போட்டியிலும் சரியான நேரத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் பற்றிய அற்புதமான புரிதலை வெளிப்படுத்தினார் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் சாசேஜ்![]() 2 days 12 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 6 days 6 hours ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 1 week 3 days ago |
-
ஆர் யூ ஒகே பேபி - விமர்சனம்
25 Sep 2023லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி நடித்துள்ள ஆர் யூ ஒகே பேபி திரைப்படம் சொல்லுவதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகல்: அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி முறிந்தது: இ.பி.எஸ். தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு
25 Sep 2023சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சமீப கால கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க.
-
டிசம்பர் மாதத்திற்கான ரூ. 300 தரிசன டிக்கெட் பதிவு துவக்கம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
25 Sep 2023திருப்பதி : டிசம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான ரூ. 300 டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.
-
ஐகோர்ட்டில் சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால் 29-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
25 Sep 2023சென்னை : லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நேற்று தனது சொத்து விபரங்களை நடிகர் விஷால் தாக்கல் செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 25-09-2023.
25 Sep 2023 -
உலகிலேயே 2-வது மிக பெரிய இந்து கோவில் : அமெரிக்காவில் வரும் 8-ம் தேதி திறப்பு
25 Sep 2023வாஷிங்டன் : இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெர
-
இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்-ரே தான் சாதிவாரி கணக்கெடுப்பு : பிலாஸ்பூரில் ராகுல் காந்தி பேச்சு
25 Sep 2023பிலாஸ்பூர்(சத்தீஸ்கர்) : இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்-ரே வாக சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
ஜெர்மனியில் களைகட்டிய உலகின் மிக பெரிய பீர் திருவிழா
25 Sep 2023ஜெர்மனி : உலகின் மிக பெரிய பீர் திருவிழா ஜெர்மனியின் முனிச் நகரில் களைகட்ட தொடங்கியது.
-
குறுவை நெற்பயிர் கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
25 Sep 2023சென்னை, குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம் : தலைமை செயலாளர் உத்தரவு
25 Sep 2023சென்னை : தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் இறைவன்
25 Sep 2023இந்த வாரம் வெளியாகவிருக்கும் இறைவன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
-
அ.தி.மு.க .- பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை பேசும்: கோவையில் அண்ணாமலை பேட்டி
25 Sep 2023கோவை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு தொடர்பாக தேசிய தலைமை பேசும் என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
-
மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி 20 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் : ஈரோட்டில் ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிப்பு
25 Sep 2023ஈரோடு : மின் நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் உள்ள 20 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நேற்று தங்களது உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தை நிறுத்தினர்.
-
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6,605 கனஅடி நீர் திறப்பு
25 Sep 2023சேலம், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 605 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு மகிழ்ச்சியளிக்கிறது : சென்னையில் சீமான் பேட்டி
25 Sep 2023சென்னை : அதிமுக- பாஜக கூட்டணி பிரிந்துள்ளதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
ஐமா விமர்சனம்
25 Sep 2023அறிமுக இயக்குநர் ராகுல் ஆர். கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ஐமா.
-
கபில் ரிட்டன்ஸ் பாடல் வெளியீடு
25 Sep 2023தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் கபில் ரிட்டன்ஸ் படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
-
மிலாடி நபி: புதுவையில் 28-ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
25 Sep 2023புதுச்சேரி : மிலாடி நபியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் 28-ம் தேதி அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
-
படப்பிடிப்பை தொடங்கி வைத்த இளையராஜா
25 Sep 2023Viswa Dream World நிறுவனம் சார்பில் R விஜயலக்ஷ்மி மற்றும் செல்லம்மாள் - குருசாமி G தயாரிப்பில், ரஜித் கண்ணா இயக்கத்தில் சாக்ஷி அகர்வால் மற
-
பார்லி. தேர்தலுக்கான பேச்சுவார்த்தை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தி.மு.க.வுடன் தொடங்கியது
25 Sep 2023சென்னை : பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பேச்சு வார்த்தையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தி.மு.க.வுடன் தொடங்கி உள்ளது.
-
வசூலை குவிக்கும் மார்க் ஆண்டனி
25 Sep 2023ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
-
விநாயகர் சிலை கரைப்பு: சென்னை மெரினா கடற்கரையில் 70 டன் கழிவுகள் அகற்றம்
25 Sep 2023சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, கரையோரங்களில் தேங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.
-
இந்தியாவின் வளர்ச்சி பணிகளை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை : போபால் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Sep 2023போபால் : இந்தியாவின் வளர்ச்சி பணிகளை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை என பிரதமர் மோடி போபாலில் நடந்த பொது கூட்டமொன்றில் பேசினார்.
-
மன்சூர் அலிகான் நடிக்கும் சரக்கு
25 Sep 2023மன்சூர் அலிகானின் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
-
டீமன் விமர்சனம்
25 Sep 2023ஒரு இளைஞனுக்கு தனியாக படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில், ஒரு வாடகை வீட்டில் குடியேறுகிறான்.