எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
போபால் : இந்தியாவின் வளர்ச்சி பணிகளை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை என பிரதமர் மோடி போபாலில் நடந்த பொது கூட்டமொன்றில் பேசினார்.
மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சந்திக்க பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர அரசியல் பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொது பேரணி ஒன்றில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று போபால் நகருக்கு சென்றிருந்தார். அப்போது போபால் நகரில் நடந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது,
இந்தியாவின் வளர்ச்சி பணிகளை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் நாட்டின் சாதனைகளை பற்றி ஒருபோதும் பெருமை கொள்ளவில்லை.
ஏனெனில், அவர்கள் மாற வேண்டும் என்றோ அல்லது நாடு மாறவோ அல்லது வளர்ச்சி பெறவோ விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி ஒரு சந்தர்ப்பம் பெற்றால், (மத்திய பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது) அவர்கள் பீமாரு ராஜ்யம் (ஏழை மாநிலம்) ஆக்கி விடுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மேலும் காங்கிரசார் டிஜிட்டல் வழியேயான பரிமாற்றங்களை எதிர்த்தனர். ஆனால், யு.பி.ஐ. நடைமுறையால் உலகம் ஈர்க்கப்பட்டு உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |