எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஜாகிர் ஹசன் களமிறங்கினர். இதில் ஜாகிர் ஹசன் 12 ரன்கள் அடித்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதபின் களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மஹ்முதுல் ஹசன் ஜாய் நிலைத்து விளையாடினார். அவருக்கு மொமினுல் ஹக் சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்தார். மொமினுல் ஹக் 37 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் நிலைக்கவில்லை. வங்காளதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. தைஜுல் இஸ்லாம் 8 ரன்களிலும், ஷோரிபுல் இஸ்லாம் 13 ரன்களிலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
______________
பாண்டியா கூறியது என்ன ?
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இந்நிலையில் மும்பை அணிக்கு திரும்பியது தொடர்பாக ஹர்திக் பாண்டியா கூறியதாவது,மும்பை அணிக்கு மீண்டும் வந்த உணர்வு மிகவும் சிறப்பானது. அவர்கள் என்னை 2013-ம் ஆண்டு முதல் கவனித்து வருகிறார்கள்.
இறுதியாக எனது முழு கிரிக்கெட் பயணமும் தொடங்கிய இடத்துக்கு திரும்பி வந்துள்ளேன். அவை என் வாழ்வின் முக்கியமான பகுதியாக இருந்தன.நான் என் வீட்டுக்கு திரும்பியது போல் உணர்கிறேன். நாம் ஒரு அணியாக வரலாற்றை உருவாக்கினோம். மீண்டும் ஒருமுறை மும்பை அணி வீரர்களுடன் சில அற்புதமான தருணங்களை உருவாக்க எதிர்பார்த்து இருக்கிறேன். மும்பை அணியில் மீண்டும் விளையாட ஆவலுடன் உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
______________
ஹாக்கி; பஞ்சாப் அணி சாம்பியன்
தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் மொத்தம் 28 அணிகள் பங்கேற்றிருந்தன. முடிவில் அரியானா மற்றும் பஞ்சாப் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து முடிவை அறிய கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் பஞ்சாப் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. 2-வது இடம் பிடித்த அரியானா அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது. இறுதி போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழ்நாடு பெனால்டி ஷூட் அவுட்டில் கர்நாடக அணியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.
______________
உலகக்கோப்பை தொடரில் நமீபியா
டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அந்த தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 9வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 5 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்ற நமீபியா அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 5 days ago |
-
3 போட்டிகள் கொண்ட தொடர்: இந்தியா - வங்காளதேசம் இன்று முதல் டி-20 போட்டியில் மோதல்
05 Oct 2024குவாலியர் : சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா?
-
சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு 65 சதவீத நிதி வழங்க முடிவு: மத்திய அரசு அறிவிப்பு
05 Oct 2024டெல்லி, சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதியை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ஒரே கட்டமாக 90 தொகுதிகளில் நடந்தது: அரியானா சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
05 Oct 2024சண்டிகார், அரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று 90 சட்டசபை தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் நடந்த வாக்குப்பதிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
தேர்தல் பத்திரங்கள் திட்டம்: தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
05 Oct 2024புதுடெல்லி : தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.
-
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
05 Oct 2024சென்னை : தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
05 Oct 2024சென்னை : தங்கம் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.
-
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
05 Oct 2024சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை
-
மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி : சிறப்பு பேருந்துகள் இயக்கம்
05 Oct 2024சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்: டிரம்ப் பேச்சு
05 Oct 2024நியூயார்க் : ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகாவில் மைசூரு, குடகு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
05 Oct 2024பெங்களூர் : கர்நாடகாவில் மைசூரு, குடகு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பினார் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
05 Oct 2024நாகை : முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் சென்ற கார் நேற்று இ.சி.ஆர். சாலையில் உள்ள கோயில் மதில் சுவற்றில் மோதியது.
-
மராட்டியத்தில் ரூ.23,300 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
05 Oct 2024மும்பை : மராட்டிய மாநிலத்தில் ரூ. 23,300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
லெபனானில் இருந்து 97 பேரை விமானம் மூலம் மீட்ட தென் கொரியா
05 Oct 2024சியோல் : லெபனானில் பதற்றம் நிலவி வரும் சூழலில் 97 பேரை விமானம் மூலம் மீட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
-
இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டு
05 Oct 2024வாஷிம் : இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டியுள்ளார்.
-
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு
05 Oct 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கைது
05 Oct 2024சென்னை : சென்னையில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
தொழில்நுட்பக் கோளாறால் விமான சேவைகள் பாதிப்பு : இண்டிகோ நிறுவனம் விளக்கம்
05 Oct 2024புதுடெல்லி : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தங்களது விமான நிலைய குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இண்டிகோ விளக்கம்
-
எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாள்: ராகுல் காந்திக்கு காங். தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து
05 Oct 2024சென்னை : நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார
-
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: 15-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
05 Oct 2024புதுடெல்லி : வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்க
-
5.24 மில்லியன் டாலர் அபராதத் தொகையை தவறான வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய டுவிட்டர் நிறுவனம்
05 Oct 2024பிரேசிலியா : கோர்ட் உத்தரவுப்படி, 5.24 மில்லியன் டாலர் அபராத தொகையை செலுத்திய டுவிட்டர் நிறுவனம், அதனை தவறான வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய விவரம் வெளியாகி உள்ளது.
-
தொடரும் போராட்டம்: சாம்சங் தொழிலாளர்கள், நிறுவனத்துடன் 3 தமிழக அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை
05 Oct 2024சென்னை, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து நாளை 3 தமிழக அமைச்சர்கள் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்
-
தமிழகத்தின் வட பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பு: வடகிழக்கு பருவமழை 15-ம் தேதி தொடக்கம் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Oct 2024புதுடெல்லி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மைசூரில் இளைஞர் தசரா விழா இன்று தொடக்கம் : பாதுகாப்பு பணியில் 1,239 போலீசார்
05 Oct 2024மைசூரு : மைசூரில் இளைஞர் தசரா இன்று துவங்குகிறது. பாதுகாப்புக்காக 1,239 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
-
டிசம்பரில் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்
05 Oct 2024புதுடெல்லி : சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது.
-
மோசடி வழக்கில் கைதானவருக்கு த.வெ.க. கட்சியுடன் தொடர்பா? - கரூர் மாவட்ட தலைவர் விளக்கம்
05 Oct 2024கரூர் : மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கரூர் மாவட்ட தலைவர் விளக்கமளித்துள்ளார்.