எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஜாகிர் ஹசன் களமிறங்கினர். இதில் ஜாகிர் ஹசன் 12 ரன்கள் அடித்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதபின் களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மஹ்முதுல் ஹசன் ஜாய் நிலைத்து விளையாடினார். அவருக்கு மொமினுல் ஹக் சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்தார். மொமினுல் ஹக் 37 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் நிலைக்கவில்லை. வங்காளதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. தைஜுல் இஸ்லாம் 8 ரன்களிலும், ஷோரிபுல் இஸ்லாம் 13 ரன்களிலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
______________
பாண்டியா கூறியது என்ன ?
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இந்நிலையில் மும்பை அணிக்கு திரும்பியது தொடர்பாக ஹர்திக் பாண்டியா கூறியதாவது,மும்பை அணிக்கு மீண்டும் வந்த உணர்வு மிகவும் சிறப்பானது. அவர்கள் என்னை 2013-ம் ஆண்டு முதல் கவனித்து வருகிறார்கள்.
இறுதியாக எனது முழு கிரிக்கெட் பயணமும் தொடங்கிய இடத்துக்கு திரும்பி வந்துள்ளேன். அவை என் வாழ்வின் முக்கியமான பகுதியாக இருந்தன.நான் என் வீட்டுக்கு திரும்பியது போல் உணர்கிறேன். நாம் ஒரு அணியாக வரலாற்றை உருவாக்கினோம். மீண்டும் ஒருமுறை மும்பை அணி வீரர்களுடன் சில அற்புதமான தருணங்களை உருவாக்க எதிர்பார்த்து இருக்கிறேன். மும்பை அணியில் மீண்டும் விளையாட ஆவலுடன் உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
______________
ஹாக்கி; பஞ்சாப் அணி சாம்பியன்
தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் மொத்தம் 28 அணிகள் பங்கேற்றிருந்தன. முடிவில் அரியானா மற்றும் பஞ்சாப் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து முடிவை அறிய கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் பஞ்சாப் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. 2-வது இடம் பிடித்த அரியானா அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது. இறுதி போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழ்நாடு பெனால்டி ஷூட் அவுட்டில் கர்நாடக அணியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.
______________
உலகக்கோப்பை தொடரில் நமீபியா
டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அந்த தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 9வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 5 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்ற நமீபியா அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-01-2025
19 Jan 2025 -
யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம்: மத்திய அரசுக்கு தமிழக கவர்னர் ரவி பாராட்டு
19 Jan 2025சென்னை : யாழ்ப்பாணத்தின் கலாச்சார மையத்தை "திருவள்ளுவர் கலாச்சார மையம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவின் அதிபராக 2-வது முறை டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்பு
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக மீண்டும் இன்று (ஜன. 20) பதவியேற்கவிருக்கிறார்.
-
பரந்தூர் செல்லும் த.வெ.க. தலைவருக்கு கட்டுப்பாடா? - காஞ்சிபுரம் எஸ்.பி. விளக்கம்
19 Jan 2025சென்னை : பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரைச் சந்திக்க விஜய்க்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.
-
மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழப்பு: காஷ்மீரில் மத்தியக்குழு ஆய்வு
19 Jan 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோய்க்கு 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு மத்திய குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினர்.
-
உ.பி. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தீ விபத்து : முதல்வர் ஆதித்யநாத் நேரில் ஆய்வு
19 Jan 2025லக்னோ : உ.பி. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பார்வையிட்டார்.
-
கோமியத்தின் மருத்துவ மதிப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் : சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேச்சு
19 Jan 2025சென்னை : கோமியத்தின் மருத்துவ மதிப்புகளை பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேசினார்.
-
தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
19 Jan 2025தென்காசி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-01-2025
19 Jan 2025 -
பெண் மருத்துவர் கொலை வழக்கு: எனது மகனை தூக்கிலிட்டாலும் வரவேற்பேன்: சஞ்சய் ராய் தாய்
19 Jan 2025கொல்கத்தா : தனது மகனை நீதிமன்றம் தூக்கிலிட உத்தரவிட்டாலும்கூட அதனை தான் அகமகிழ்ந்து ஏற்பதாக, பெண் மருத்துவர் கொலை குற்றவாளி சஞ்சய் ராயின் தாயார் ஆத்திரத்துடன் தெரிவித்த
-
மே முதல் பயன்பாட்டிற்கு வரும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம்
19 Jan 2025சென்னை : மே மாதம் முதல் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வர உள்ளது.
-
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் கலாச்சார மையத்தால் உலக தமிழர்கள் மகிழ்ச்சி: எல்.முருகன்
19 Jan 2025சென்னை : யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ள
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று சின்னத்துடன் வெளியீடு
19 Jan 2025ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., நா.த.க.
-
நைஜீரியாவில் பயங்கரம்: பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்ததில் 60 பேர் பலி
19 Jan 2025அபுஜா : நைஜீரியாவில் பெட்ரோல் கொள்கலன் லாரி வெடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க.வினர் சதி: முதல்வர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு
19 Jan 2025புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
-
ஈரோடு கிழக்கில் சுயேட்சையாக களமிறங்கும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் கட்சியில் இருந்து நீக்கம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Jan 2025சென்னை : ஈரோடு கிழக்கு சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளா
-
இன்று அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக வாஷிங்டனில் பலர் போராட்டம்
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தம் தாமதம் எதிரொலி: காசாவில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 19 பேர் பலி
19 Jan 2025காசா முனை : போர் நிறுத்த ஒப்பந்தத்தை சுமார் 3 மணிநேரம் ஹமாஸ் தாமதப்படுத்தியதால் இஸ்ரேல் காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
-
கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்ற மத்திய அரசு
19 Jan 2025திருப்பதி : திருப்பதியில் நடந்த அசம்பாவித சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை மத்திய அரசு திரும்ப பெற்றது.
-
மருத்துவ சிகிச்சை பெற ஜக்ஜித்சிங் ஒப்புதல்: உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட 121 விவசாயிகள்
19 Jan 2025சண்டிகர் : ஜக்ஜித் சிங் தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற ஒப்புக்கொண்டதையடுத்து 121 விவசாயிகள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.
-
நடிகர் சைப் அலிகான் வழக்கு: கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர்
19 Jan 2025மும்பை : நடிகர் சைப் அலிகான் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
-
பணய கைதிகளின் பட்டியல் வழங்க வேண்டும்: ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை
19 Jan 2025கெய்ரோ : பணய கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் இல்லை என்று நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் 24, 25-ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jan 2025சென்னை : தமிழகத்தில் 24, 25-ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பரந்தூர் விமான நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு: போராட்டக்காரர்களை இன்று சந்திக்கிறார் த.வெ.க. தலைவர்
19 Jan 2025சென்னை : பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று (திங்கட்கிழமை) த.வெ.க.
-
ம.பி.யில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொலை
19 Jan 2025போபால் : அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்தத்து வீட்டுக்காரர் அடித்து கொல்லப்பட்டார்.