எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேங்க்டாக் : வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கடந்த அக்டோபர் 4-ம் தேதி, லோனாக் ஏரிப் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக கொட்டித்தீர்த்த அதீத கனமழையால், தீஸ்தா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர். மேலும், வெள்ளத்தில் 77 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 2 பேரின் உடல்கள், அடையாளம் தெரியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரை தேடும் பணி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், அவர்களின் கதி என்ன என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 மாதங்களைக் கடந்து விட்ட நிலையில், மாயமானவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும், அவர்கள் அனைவரும் இறந்திருக்கக்கூடும் எனவும் சிக்கிம் தலைமைச் செயலாளர் விபி பதாக் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து, அவர்களின் குடும்பத்துக்கு, இயற்கை பேரிடர்களால் உயிரிழப்போருக்கு வழங்கப்படும் நிவாரணத்தின் கீழ், மாநில அரசு நிவாரணத் தொகையாக ரூ.4 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |