எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் வரத்து குறைந்ததால், நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 13ல் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து துவங்கியது.
24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 23.45 அடியாகவும், கொள்ளளவு 3,473 மி.கன அடியாகவும் உள்ளது. இந்த ஏரியில் நேற்று முன்தினம் 8,514 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 4,166 கன அடியாக குறைந்துள்ளது. இதனையடுத்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியில் இருந்து 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவானது குறைக்கப்பட்டுள்ளது. 6000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது வினாடிக்கு 1,189 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னையில் மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் உள்ளன. மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால், இவையனைத்தும் நீரில் மூழ்கின. இதனால் போக்குவரத்து தடைப்பட்டன. இந்த நிலையில், ஆலந்தூர் அருகே தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை உட்பட 13 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அதன் வழியே போக்குவரத்து துவங்கியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |