எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு முன் மக்களின் மனங்களை வெல்வது அவசியம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பொய்யான வாக்குறுதிகளால் எதனையும் பெற முடியாது என சில அரசியல் கட்சிகள் புரிந்து கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்கள் நாட்டு மக்களுக்கு சென்று சேரும் வகையில், பிரதமர் மோடியால் கடந்த நவம்பர் மாதம் விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை தொடங்கி வைக்கப்பட்டது. மோடி அரசின் 9 ஆண்டு கால பணியை மக்களிடம் எடுத்து செல்வது மற்றும் வருகிற ஆண்டுகளுக்கு தயாராவது ஆகிய திட்டத்தின்படி இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. அரசின் இந்த திட்டங்களை பெற தகுதி வாய்ந்த, ஆனால் பலனடையாத பயனாளிகளை திட்டங்கள் சென்றடையும் நோக்கத்தில் நாடு முழுவதும் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை என்ற பெயரிலான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே நேற்று கலந்து கொண்டு பயனாளிகளுடன் உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான பயனாளிகள் இணைந்தனர். மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், நாடு முழுவதும் விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரைக்கான 2 ஆயிரம் வேன்கள், கிரிஷி விக்யான் மையங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவையும் இணைந்தன.
பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசும்போது, நம்முடைய அரசின் சில திட்டங்கள் அல்லது வேறு திட்டங்களால், நாட்டிலுள்ள கிராமங்களில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் நிச்சயம் பயன் பெற்றுள்ளன. இந்த பலனை யார் பெறுகிறாரோ, அவருடைய நம்பிக்கை அதிகரிக்கிறது. வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு புதிய பலமும் வந்து சேருகிறது.
இந்த நாட்டின் ஒவ்வோர் ஏழையும் எனக்கு மிக முக்கிய நபரே (வி.ஐ.பி.யே). சமீபத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மோடியின் உத்தரவாதம் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என அந்த முடிவுகள் காட்டுகின்றன. எனது உத்தரவாதம் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். பொய்யான வாக்குறுதிகளால் எதனையும் பெற முடியாது என சில அரசியல் கட்சிகள் புரிந்து கொள்வதில்லை என்று அவர் பேசியுள்ளார். தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு முன் மக்களின் மனங்களை வெல்வது அவசியம் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
வார ராசிபலன்
14 Feb 2026


