எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஹாக்கி இந்தியா அமைப்பில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த தலைமை நிர்வாக அதிகாரி எலினா நார்மன் (வயது 49) இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 13 ஆண்டுகளாக பதவி வகித்த எலினா நார்மனுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. சம்பளம் நிறுத்தி வைப்பு மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிளவு போன்ற காரணங்களால் தனது பணி மிகவும் கடினமாக இருந்ததாகவும் எலினா நார்மன் குற்றம்சாட்டினார். தனது முடிவு குறித்து எலினா நார்மன் மேலும் கூறியதாவது:-
சம்பளம் தொடர்பாக பல பிரச்சினைகள் இருந்தன. தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு கடந்த வாரம் அதற்கு தீர்வு கிடைத்தது. ஹாக்கி இந்தியாவில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவில் தலைவர் திலீப் திர்கேவும் நானும் இருக்கிறோம். அங்கே செயலாளர் போலாநாத் சிங், செயல் இயக்குநர் சி.டி.ஆர். ஆர் கே ஸ்ரீவஸ்தவா மற்றும் பொருளாளர் சேகர் ஜே.மனோகரன் ஆகியோர் உள்ளனர். இரு பிரிவினருக்கு இடையே நடந்த சண்டையை சமாளித்து என் பணியை செய்வது கடினமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
_________________________________________________
டி20 போட்டிகளில் அதிவேக சதம்
முதல் போட்டியில் நமீபியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நமீபியா 20 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. நமீபிய வீரர் லாஃப்ட்டீ ஈட்டன் 33 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக நமீபியாவுக்கு எதிராக நேபாள வீரர் குசல் மல்லா 34 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது.
_________________________________________________
அரையிறுதிக்கு முன்னேறிய விதர்பா
விதர்பா மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பையின் காலிறுதிப் போட்டி கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று போட்டி நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் விதர்பா அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கர்நாடகத்தை வெளியேற்றியது. 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கர்நாடகம் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்து.
இதன் மூலம் கர்நாடகம் 128 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. விதர்பா தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் ஹார்ஷ் துபே மற்றும் ஆதித்யா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஏற்கனவே மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், தற்போது விதர்பாவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________
டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கின் 2வது தொடர் பெங்களூரில் பிப்-23 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், உ.பி. ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.
இந்த நிலையில் நடைபெற்ற 4வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி அணிக்கு 120 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. தனது எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வந்த டெல்லி அணி 14.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. உபி வாரியர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்வேதா ஷெராவத் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 45 ரன்கள் விளாசினார். டெல்லி அணியின் பந்துவீச்சில் ராதா யாதவ் 4, மாரிஸேன் காப் 3, அருந்ததி ரெட்டி, அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
_________________________________________________
நியூசிலாந்து முன்னணி வீரர் ஓய்வு
நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் (வயது 37). இவர் நியூசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 874 ரன்னும், 260 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். வரும் 29ம் தேதி வெல்லிங்டனில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் லெவன் அணியில் நீல் வாக்னெர் இடம் பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓய்வு முடிவை அடுத்து வாக்னெர் கூறும்போது, இந்த முடிவு எளிதானது அல்ல. அது உணர்ச்சிமிக்கது. ஆனால் முன்னேற இதுவே சரியான நேரம். பிளாக் கேப்ஸிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன். மேலும் ஒரு அணியாக எங்களால் சாதிக்க முடிந்த அனைத்திலும் பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பிணைப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன். இன்று நான் இருக்கும் இடத்தில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 5 days ago |
-
6 ஆண்டுகளில் முதன்முறையாக கனடா ஜி-7 மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் நரேந்திரமோடி திடீர் முடிவு?
02 Jun 2025புதுடில்லி, ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்காமல் புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 40 ரஷ்யா போர் விமானங்கள் அழிப்பு
02 Jun 2025கீவ் : உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது.
-
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்
02 Jun 2025சென்னை, பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
இம்மாதம் வெளியாகும் கண்ணப்பா திரைப்படம்
02 Jun 2025தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-06-2025.
02 Jun 2025 -
காய்ச்சலால் பாதிப்பு: துணை முதல்வர் உதயநிதி ஓய்வெடுக்க அறிவுறுத்தல்
02 Jun 2025சென்னை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து
-
48 மணி நேரத்தில் தயாரான முழு திரைப்படம்
02 Jun 2025ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின்
-
அமெரிக்காவில் நடந்த இஸ்ரேல் ஆதரவு பேரணியில் மக்கள் மீது தீ வைத்து எரிக்க முயற்சி
02 Jun 2025நியூயார்க் : அமெரிக்காவின் கொலராடோவில், காசாவில் ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் திரவத்தை வீசி, அவர்கள் ம
-
அரியானாவில் சாலை விபத்து - 4 பேர் பலி
02 Jun 2025சண்டிகர் : அரியானாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
போரை முடிவுக்குக் கொண்டுவர ராஜதந்திரத்துடன் விளையாடுவதை ரஷ்யா நிறுத்த வேண்டும்: ஜெலன்ஸ்கி
02 Jun 2025கீவ், ரஷ்யா ராஜதந்திரத்துடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
திரிபுராவில் ரூ.7 கோடி மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல்
02 Jun 2025அகர்தலா : திரிபுராவில் 7 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
02 Jun 2025சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
கன்னடம் குறித்த கமல் பேச்சு: இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம்: டி.கே.சிவகுமார் கருத்து
02 Jun 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.
-
யார் அந்த சார்? என்ற கேள்வியை எழுப்புவது நீதிமன்ற அவமதிப்பு: வழக்குரைஞர் மேரி ஜெயந்தி தகவல்
02 Jun 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதால், யார் அந்த சார்?
-
மனிதர்கள்’ திரை விமர்சனம்
02 Jun 20256 நண்பர்கள் சேர்ந்து மது அருந்துகிறார்கள். திடீரென்று அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறார்.
-
இளையராஜா பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
02 Jun 2025சென்னை, இளையராஜா பிறந்தநாளை யொட்டி, அவருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அக்யூஸ்ட் இசை வெளியீடு
02 Jun 2025ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.
-
அசாமில் கனமழை: பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வர் பிஸ்வா சர்மா ஆறுதல்
02 Jun 2025குவகாத்தி, அசாமில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
-
சென்னை மெட்ரோ ரயில்களில் மே மாதத்தில் 89.09 லட்சம் பேர் பயணம்
02 Jun 2025சென்னை, கடந்த மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்: இளையராஜாவுக்கு முதலவர் ஸ்டாலின் வாழ்த்து
02 Jun 2025சென்னை, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நேற்று (ஜூன் 2) பிறந்தநாள். நேற்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
-
ஒரு காபிக்கு அழைத்து பாக். உடனான பிரச்சினையை தீர்த்துவிட முடியாது: கனிமொழி எம்.பி. பேச்சு
02 Jun 2025மாட்ரிட், பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து மோதல்களை முடித்து வைத்து, பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்
-
தம்பியை அறிமுகம் செய்து வைத்த விஷணு விஷால்
02 Jun 2025கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
-
இந்தோனசியாவில் ஏற்பட்ட கல் குவாரி விபத்தில் உயிரிழப்பு 19 ஆனது
02 Jun 2025ஜகார்த்தா : இந்தோனசியாவில் ஏற்பட்ட கல் குவாரி விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புபணிகள் 4/வது நாளாக தொடக்கம்.
-
குப்பைகளைத் தரம் பிரித்து போடும் நாகரிகப் பண்பு இன்றியமையாதது: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
02 Jun 2025சென்னை, குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
”டாக் புராக்ஸி” தேசிய அளவில் அறிமுகம்
02 Jun 2025இந்திய விவசாயத்தில் களைகள் ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.