முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      தமிழகம்
Murugan 2023 04 02

கோவை, நீலகிரியில் ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் எந்தவித சந்தேத்திற்கும் தேர்தல் ஆணையம் வழிவகுக்க கூடாது என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். 

மத்திய இணை அமைச்சரும், நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி ஸ்ட்ராங் ரூம் சி.சி.டி.வி. கேமராக்கள் 20 நிமிடம் செயலிழந்ததாக தகவல் வெளியானது. தொழில்நுட்ப கோளாறு மற்றும் வெப்பம் காரணமாக சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழந்ததாக கூறுகிறார்கள். தொழில்நுட்ப கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பணி. 

ஊட்டியிலும் வெயில் அதிகமாகதான் உள்ளது. எந்த காரணமும் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் முழு கண்காணிப்பில் இருக்க வேண்டும். கேமரா செயலிழப்புக்கு பொருந்தாத காரணங்கள் சொல்வதை நிறுத்த வேண்டும். 

நீலகிரி, கோவை, தென் சென்னை தொகுதிகளில் அதிகளவு வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் தோல்வியை மறைக்க வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்த முடியாது என தேர்தல் கமிஷன் பல முறை விளக்கம் அளித்து உள்ளது. 

காங்கிரசும், இண்டியா  கூட்டணியும் தோல்வி பயத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி ஏதாவது கூறி திசைதிருப்பி வருகின்றனர். 500 ஆண்டுகால மக்களின் போராட்டம், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. 

அங்கு செல்ல மாட்டேன் என ராகுல் கூறுவது, கடவுள் மீது அவருக்கு நம்பிக்கையில்லை என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து