எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெங்களூரு : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
14 ஆட்டங்களில்...
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
68-வது லீக் ஆட்டம்...
நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. 'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சிய ஒரு இடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 68-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது.
பீல்டிங் தேர்வு...
சென்னை அணியில் ஒரு மாற்றமாக மொயீன் அலிக்கு பதிலாக மிட்செல் சான்ட்னெர் சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் நாடு திரும்பிய வில் ஜாக்சுக்கு பதிலாக மேக்ஸ்வெல் இடம் பெற்றார். 'டாஸ்' ஜெயித்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். குறிப்பாக விராட்கோலியின் ஆட்டத்தில் அதிக ஆக்ரோஷம் தெரிந்தது. 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் சுமார் 40 நிமிட பாதிப்புக்கு பிறகு ஆட்டம் தொடர்ந்தது.
4-வது அரைசதம்...
அதன் பிறகு இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி ரன்னை உயர்த்தினார்கள். ஸ்கோர் 78 ரன்னை எட்டிய போது (9.4 ஓவரில்) விராட் கோலி 47 ரன்னில் (29 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் டேரில் மிட்செலிடம் பவுண்டரி அருகில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரஜத் படிதார் களம் புகுந்தார். சிறிது நேரத்தில் 4-வது அரைசதம் அடித்த பிளிஸ்சிஸ் 54 ரன்னில் (39 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து கேமரூன் கிரீன், ரஜத் படிதாருடன் இணைந்தார். வேகமாக மட்டையை சுழற்றிய இருவரும் ரன்வேகத்தை குறையாமல் பார்த்துக் கொண்டனர்.
டோனியிடம் கேட்ச்...
ரஜத் படிதார் 41 ரன்னில் (23 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் டேரில் மிட்செலிடம் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார். அடுத்து களம் கண்ட தினேஷ் கார்த்திக் 14 ரன்னில் (6 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) துஷர் தேஷ்பாண்டே பந்து வீச்சிலும், மேக்ஸ்வெல் 16 ரன்னில் (5 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஷர்துல் தாக்குர் பந்து வீச்சிலும் டோனியிடம் கேட்ச் ஆனார்கள்.
6-வது முறையாக...
20 ஓவரில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் அந்த அணி 6-வது முறையாக 200 ரன்னுக்கு மேலாக எடுத்துள்ளது. 18 ரன்னில் இருக்கையில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய கேமரூன் கிரீன் 38 ரன்களுடனும் (17 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), மஹிபால் லோம்ரோர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டும், துஷர் தேஷ்பாண்டே, மிட்செல் சான்ட்னெர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
219 ரன்கள் இலக்கு...
இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (0) மேக்ஸ்வெல் பந்து வீச்சில் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் (4 ரன்) வந்த வேகத்திலேயே வெளியேறினார். இதனால் அந்த அணி 19 ரன்னுக்குள் 2 விக்கெட்டை (2.2 ஓவரில்) இழந்தது. இதைத்தொடர்ந்து ரஹானே, ரச்சின் ரவீந்திராவுடன் சேர்ந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 85 ரன்னாக உயர்ந்த போது (9.1 ஓவரில்) ரஹானே 33 ரன்னில் (22 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெர்குசன் பந்து வீச்சில் பிளிஸ்சிஸ்சிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
பிரமாண்டமான...
அடுத்து ஷிவம் துபே களம் இறங்கினார். முதல் அரைசதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா 61 ரன்னில் (37 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். அடுத்த ஓவரில் ஷிவம் துபே (7 ரன்) கேமரூன் கிரீன் பந்து வீச்சில் பெர்குசனிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த மிட்செல் சான்ட்னெர் (3 ரன்) நிலைக்கவில்லை. 7-வது விக்கெட்டுக்கு டோனி, ஜடேஜாவுடன் கைகோர்த்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். கடைசி ஓவரில் முதல் பந்தில் 110 மீட்டர் தூரத்துக்கு பிரமாண்டமான சிக்சர் விளாசிய டோனி (25 ரன், 13 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்த பந்தில் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார்.
பெங்களூரு வெற்றி...
20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட்டுக்கு 191 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா 42 ரன்களுடனும் (22 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு தரப்பில் யாஷ் தயாள் 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல், முகமது சிராஜ், பெர்குசன், கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 14-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. அத்துடன் அந்த அணி தொடர்ச்சியாக 6-வது வெற்றியை ருசித்து அசத்தியது. சென்னை அணி 7-வது தோல்வியை சந்தித்து 14 புள்ளிகளிலேயே நீடித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
அமெரிக்காவில் சீக்கியர்களின் தலைப்பாகை கட்டாய அகற்றம் : சீக்கிய மத அமைப்பு கண்டனம்
17 Feb 2025பஞ்சாப் : அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீக்கியர்களை அமெரிக்க அதிகாரிகள் தலைப்பாகையை அகற்றும்படி கட்டாயப்படுத்திய சம்பவத்திற்கு சீக்கிய மத அமைப்பினர் கண்டனம் தெர
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும் : விவசாயிகள் அணி கூட்டத்தில் தீர்மானம்
17 Feb 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய அக்கட்சியின் விவசாயிகள் பிரிவின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
2 நாள் பயணமாக இந்தியா வருகை; கத்தார் அதிபர் இன்று ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்திக்கிறார்
17 Feb 2025டெல்லி, 2 நாள் பயணமாக இந்தியா வந்த கத்தார் அதிபர் இன்று ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
-
சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
17 Feb 2025சென்னை: மத்திய அரசசைக் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனிடம் முதல்வர் நலம் விசாரித்தார்
17 Feb 2025சென்னை: உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஅமைச்சர் துரைமுருகனிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
-
தேசிய அளவில் ஊராட்சிகளில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முதலிடம்
17 Feb 2025சென்னை: தேசிய அளவில் ஊராட்சிகளில் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Feb 2025சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-02-2025.
17 Feb 2025 -
குமிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற தாதுமணல் கொள்ளை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
17 Feb 2025சென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கை சி.பி.ஐ.
-
முடிவுக்கு வருகிறது உக்ரைன் போர் ? சவுதியில் அமெரிக்கா-ரஷியா பேச்சுவார்த்தை
17 Feb 2025ரியாத்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்கா, ரஷியா பேச்சுவாத்தை நடத்த உள்ளன.
-
உ.பி. மகா கும்பமேளாவில் 53 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடல்
17 Feb 2025லக்னோ: மகா கும்பமேளாவிற்கு இதுவரை 53 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
-
4 ரிக்டர் நில அதிர்வுக்கே டெல்லி குலுங்கியது ஏன்?
17 Feb 2025புதுடெல்லி: டெல்லியில் 4.0 ரிக்டருக்கே கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கியது ஏன்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
டெல்லி ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
17 Feb 2025புதுடெல்லி, பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்க புதுடெல்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிச
-
ஒத்த ஓட்டு முத்தையா விமர்சனம்
17 Feb 2025சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால், ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அழைக்கப்படும் அரசியல்வாதி கவுண்டமணி, தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில்
-
தடை செய்யப்பட்ட சீன ட்ரோனை இயக்கி சர்ச்சையில் சிக்கிய ராகுல்
17 Feb 2025புதுடில்லி, தடை செய்யப்பட்ட சீன டிரோனை காங்கிரஸ் தலைவர் ராகுல் இயக்கிய வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வில் நான் சாதாரண தொண்டன்: செங்கோட்டையன்
17 Feb 2025திருச்சி, அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் கிடையாது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
பிரதீப்பின் நடிப்பு நிச்சயம் பேசப்படும் – இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து
17 Feb 2025பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படம் டிராகன்.
-
தினசரி விமர்சனம்
17 Feb 2025ஐடியில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீகாந்த் தனக்கு மனைவியாக வருபவர், தன்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.
-
முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
17 Feb 2025சென்னை: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 9-ல் தெப்போற்சவம் ஆரம்பம்
17 Feb 2025திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 9-ல் தெப்போற்சவம் ஆரம்பமாகிறது.
-
டில்லியில் வரும் 20-ம் தேதி புதிய அரசு பதவியேற்கிறது?
17 Feb 2025புதுடில்லி: டில்லி ராம்லீலா மைதானத்தில் பிப்.20ஆம் தேதி பா.ஜ.க.வின் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
பேபி & பேபி விமர்சனம்
17 Feb 2025குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளும் ஜெய் அப்பா சத்யராஜுக்கு பயந்து மனைவியுடன் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்..
-
பிணை கைதிகளை விடுவிக்காவிட்டால் மிகபெரிய வேதனையை சந்திக நேரிடும் : ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
17 Feb 2025இஸ்ரேல் : பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.
-
பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
17 Feb 2025சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரம் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 
-
வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகள் 90 சதவீதம் முடிந்தன : அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது
17 Feb 2025சென்னை : வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்ததையொட்டி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் தெரிவித்தார்.