எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, சீன ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சாத்விக்- சிராக் ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில், சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
_______________________________________________________
டோனி குறித்து ஜெயக்குமார்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்திய பெங்களூரு அணி ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சென்னை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. சென்னை அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இது 3-வது முறையாகும். டோனி குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தோல்வியின் விளிம்பில் அணி இருக்கையில் வந்த டோனியை பார்த்தவுடன் இதுதான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தினேன்! ஆனால் விக்கெட் ஆவதற்கு முன்பு ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன் இவருக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன்! சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! நன்றி டோனி! என பதிவிட்டுள்ளார்.
_______________________________________________________
உணர்ச்சிவசப்பட்ட கோலி, அனுஷ்கா
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி செல்கிறது. பிளே-ஆப் சுற்றில் இடம் பெறும் 4 அணிக்கான தரவரிசையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 3 அணிகள் முன்பே தகுதி பெற்று இடம் பிடித்து விட்டன. இதனால், மீதமுள்ள 4-வது இடம் யாருக்கு என நிர்ணயிக்கும் 68-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இதனை அடுத்து போட்டி முடிந்ததும், பெங்களூரு அணி வீரர்கள், நிர்வாகத்தினர், ரசிகர்கள் என பலரும் மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அணியின் வீரரான விராட் கோலி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். போட்டியில் வெற்றி பெற்றது தெரிந்ததும், களத்திற்குள் ஓடி சென்று சக வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவும் பார்வையாளர்கள் வரிசையில் நின்றபடி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
_______________________________________________________
ஸ்காட்லாந்து அணி ஜெர்சியில்....
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்று விளையாடுகின்றன. டி20 உலகக் கோப்பைக்கான அணிகள் மற்றும் அணியின் சீருடையை (ஜெர்சி) ஒவ்வொரு அணிகளும் அறிவித்து வருகின்றன. சமீபத்தில் நீலத்துடன் காவி நிறம் இடம்பெற்ற புதிய அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது.
பக்கத்து மாநிலமான கர்நாடக மாநில அரசின் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான நந்தினி, வெளிநாடுகளிலும் தங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவிகளை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் கால்பதித்துள்ள நந்தினி நிறுவனம், அந்நாட்டின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அணி விளம்பரதாரராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்காட்லாந்து அணி அறிமுகம் செய்துள்ள தங்களது அணியின் சீருடையில் நந்தினி பால் விளம்பரம் இடம்பெற்றுள்ளது.
_______________________________________________________
வெற்றி குறித்து தினேஷ் கார்த்திக்
பெங்களூருக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது. எம்.எஸ் டோனியின் கடைசி சீசன் என்பதால் ஒரு பக்கம் டோனி வெற்றி பெற வேண்டும் எனவும் , மறுபுறம் கோலி வெற்றி பெற வேண்டும் எனவும் உணர்ச்சி பொங்க மைதானம் காட்சியளித்தது. போட்டியின் இறுதியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
ஆனால் மறுபுறம் ‘தல’யின் அணி தோல்வியை தழுவியது. இது கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் இந்த முறை பெங்களூரு அணி இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் என அனைவரும் நம்புகின்றனர். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் கூறியுள்ளதாவது; “சி.எஸ்.கே. அணிக்கு எதிரான போட்டியில் எங்களுக்கு சாதகமாக நிகழ்ந்த விஷயம் டோனி அடித்த அந்த 110 மீ சிக்ஸர் தான். அந்த பந்து மைதானத்துக்கு வெளியே போனதால் தான் புதிய பந்து கிடைத்து பந்துவீச சுலபமாக இருந்தது. அது தான் நமது வெற்றியை எளிதாக்கியது” என தெரிவித்துள்ளார்.
_______________________________________________________
டோனியால் வெடித்த சர்ச்சை
போட்டி முடிந்ததும் களத்தில் இருந்து வெளியேறும் வீரர்களுக்கு பெவிலியனில் இருக்கும் வீரர்கள் கைகொடுத்து வரவேற்பது வழக்கம். ஆனால் ஆர்சிபி வெற்றி பெற்றவுடன் களத்தில் இருந்து பெவிலியன் வந்த ஆர்சிபி வீர்களுக்கு சிஎஸ்கே வீரர்கள் கைகொடுக்க காத்திருந்தினர். அப்போது அதில் முதல் ஆளாக நின்றுகொண்டிருந்த டோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல், அங்கிருந்த அந்த அணியின் மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்களுக்கு கைகொடுத்துவிட்டு சென்றார். இந்த விடியோ இணையளதங்களில் வைரலாகி வருவதோடு டோனியில் இந்த செயலை பல்வேறு தரப்பினர் விமர்சித்தும் வருகின்றனர்.
_______________________________________________________
டோனி குறித்து சுரேஷ் ரெய்னா
ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்ற பிறகு எம்.எஸ்.டோனி ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், ருதுராஜ் கெயிக்வாட்டை கேப்டனாக வளர்த்தெடுக்க அடுத்த ஐபிஎல் சீசனிலும் எம்.எஸ்.டோனி விளையாட வேண்டும் என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
_______________________________________________________
யாஷ் தயாளுக்கு பாராட்டு
சென்னைக்க எதிரான போட்டியில் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அப்போது அவர் கூறியதாவது: லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. முதலாவதாக பேட் செய்ய நான் ஆடிய ஆடுகளங்களில் மிகவும் கடினமானதாக இந்த ஆடுகளம் இருந்தது. கடந்த 6 போட்டிகளாக எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். ஸ்ட்ரைக் ரேட்டும் சிறப்பாக இருந்தது.
இலக்கு சற்று நெருக்கமாக இருந்தபோது டோனி களத்தில் இருந்தார். பலமுறை வெற்றிகரமாக அதை அவர் செய்துள்ளார் என எண்ணினேன். ஈரமான பந்தில் எங்களது பந்துவீச்சை மாற்ற முயற்சித்தோம். ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு வழங்க விரும்புகிறேன். அவர் பந்துவீசிய விதம் நம்ப முடியாததாக இருந்தது. அதற்கு அவர் தகுதியானவர். கடைசி ஓவர் வீசுவதற்கு முன் பந்தில் அதிகம் பேஸ் வேண்டாம் என அவரிடம் சொன்னேன். அவரது திறனை நம்புமாறு சொன்னேன். முதல் பந்தில் யார்க்கர் முயற்சித்தார். அடுத்தடுத்த பந்துகளில் வேகத்தை மட்டுப்படுத்தினார். அது பலன் தந்தது. எங்களுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. எங்களது முதல் இலக்கு நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைவது. இதை இந்த நேரத்தில் அனுபவிப்பது அவசியம் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பலூனில் பறக்கும் போது பிடித்த தீ; அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பிய ம.பி. முதல்வர் மோகன் யாதவ்
13 Sep 2025போபால் : மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் தீப்பிடித்தது. இதில் அவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
-
இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம்: பிலிப் சால்ட் புதிய சாதனை
13 Sep 2025மான்செஸ்டர் : டி-20 போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் சாதனையை முறியடித்து இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்து பிலிப் சால்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமைத்தோ்தல் அதிகாரி தகவல்
13 Sep 2025சென்னை : தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
2வது டி-20-யில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
13 Sep 2025மான்செஸ்டர் : 2-வது டி-20 போட்டியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட்டின் அபார பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
-
நேபாள இடைக்கால அரசின் பிரதமராக சுசீலா பதவியேற்பு : பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
13 Sep 2025புதுடில்லி : நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
13 Sep 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 19,228 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
13 Sep 2025கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.