முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: ரோடுஷோவில் பிரியங்கா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 23 மே 2024      இந்தியா
Priyanka-2024-05-23

சண்டிகர், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கு நாளை 25-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதனால், சிர்சா மாவட்டத்தில் நடந்த ரோடு ஷோவில் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர். ரோடு ஷோவில் பிரியங்கா காந்தி பேசியதாவது: 

அரியானாவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அலை வீசுகிறது. பா.ஜ.க.வின் அரசியலை கண்டு மக்கள் சோர்வடைந்துள்ளனர். நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அரசியல் மாற்றம் வரும். 

பா.ஜ.க. அரசின் அநீதிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் நீதிப்போர் தொடர்கிறது. நீதி வெல்லும். பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் என்ற வார்த்தைகள் மக்கள் வாயிலிருந்து வந்தது இல்லை. 

பத்து வருடமாக பிரதமர் மோடி ஆட்சியில் இருந்து உள்ளார். மக்களுக்காக பிரதமர் மோடி எதும் செய்யவில்லை. இவ்வாறு பிரியங்கா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து