முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சனிக்கிழமை, 25 மே 2024      இந்தியா
Murmu 2024-05-25

புது டெல்லி, டெல்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற  ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார்.

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு நேற்று  தேர்தல் நடைபெற்றது. 

இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும். பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று  வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜனநாயக கடமையாற்றினார். காலை 9 மணியளவில் டெல்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற  ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார். 

மேலும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், அவரது மனைவி சுதேஷ் தங்கர் இருவரும் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தங்களது வாக்கைச் செலுத்தினர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து