முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொன்ற மருமகளுக்கு மரண தண்டனை

புதன்கிழமை, 12 ஜூன் 2024      இந்தியா
Cort 2023 07-15

Source: provided

போபால் : தனது 50 வயது மாமியாரை 95 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த, 24 வயது பெண்ணுக்கு மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவாவில் வசித்து வந்தவர் சரோஜ். இவருக்கும் இவரது மருமகளுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. 2022ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி மீண்டும் இவர்களுக்குள் சண்டை நடந்துள்ளது. அன்று வீட்டில் மாமியார் மட்டும் இருந்துள்ளார். இதனால் மருமகள் மாமியாரை வீட்டில் இருந்த கத்தியால் மாறி மாறி 95 முறை குத்திக் கொலை செய்தார்.

இது குறித்து சரோஜின் மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். மருமகள் கைது செய்யப்பட்டார். ரேவா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு வருடங்களாக விசாரணை நடந்து வந்தது. மாமியாரை 95 முறை குத்தி கொலை செய்த, மருமகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மருமகள் பெயர் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து