முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விரைவில் தீர்மானம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தகவல்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      இந்தியா
CM-1 2024-06-24

சென்னை, சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு நேற்று நடைபெற்றது. கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் , சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்து பேசுகையில், இட ஒதுக்கீட்டிற்கு அரசு எந்த விதத்திலும் தடையாக இல்லை. சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக இருக்கும்.10.5 சதவீத தரவுகள் இல்லாததால் உயர்நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான தரவுகளை பெற்றுத்தர நீதியரசர் பாரதிதாசன் குழுவை அமைத்துள்ளோம். என கூறினார்.

இதையடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது:- இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடுமுழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கு பிறகுதான் இதை அமல்படுத்த முடியும். ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் உறுப்பினர் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

உறுப்பினர் ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமென இங்கே பேசி, அதற்கு நம்முடைய அமைச்சர்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தை விரைவில் கொண்டு வரலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கு பாமக ஆதரவு தரவேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். என கூறினார். அதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும்; மாநில அரசு நடத்த முடியாது என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து