எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காசா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் கடந்த 10 நாள்களாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் படையினா் அங்கிருந்து வெளியேறினா்.
இது குறித்து ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், இஸ்ரேல் படையினா் வெளியேறுவதற்கு முன்னா் அவா்களின் 10 நாள் தாக்குதல் நடவடிக்கையில் ஏராளமான கட்டுமானங்களை தரைமட்டமாகியிருந்தனா் என்று தெரிவித்தது.
இது குறித்து பாலஸ்தீன வெளியுறுவத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் ஏற்படுத்திய நாசத்தை மேற்குக் கரை பகுதிக்கும் இஸ்ரேல் ராணுவம் கொண்டு வந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
மேற்குக் கரையின் ஜெனின் மற்றும் துல்கா்ம் பகுதியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியதாக இஸ்ரேல் கடந்த மாதம் 27-ம் தேதி அறிவித்தது. இந்த நடவடிக்கையில் 39 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டதாகவும் சுமாா் 140 போ் காயமடைந்ததாகவும் பிபிசி ஊடகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |