எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டாக்டர் கே திம்மப்பையா நினைவு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 19 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதில் கர்நாடகா மற்றும் கோவா அணிகள் மோதின. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 26.3 ஓவர்களில் 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். முதல் இன்னிங்சில், கர்நாடகா 36.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் டெண்டுல்கர் 13 ஓவர்களில் 5/41 எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கோவா அணியில் அபினவ் தேஜ்ரானா (109) சதம் அடிக்க கோவா 413 ரன்களை குவித்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய கர்நாடகா அணி 30.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் கோவா அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அர்ஜுன் 13.3 ஓவர்களில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அர்ஜூன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அர்ஜுன், இதுவரை சீனியர் மூன்று வடிவங்களில் 49 போட்டி ஆட்டங்களில் விளையாடி 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 13 முதல் தர ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
______________________________________________________________________
முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள்
வரலாற்றில் முதல் முறையாக நேரடி செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய செஸ் வீரர்கள் அர்ஜுன் எரிகைசி மற்றும் குகேஷ் டி ஆகியோர் நேரடி செஸ் தரவரிசையில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றுள்ளனர். குகேஷ் 2775.2 புள்ளிகளையும், எரிகைசி 2788.1 புள்ளிகளையும் பெற்றுள்ளார். நேரடி செஸ் தரவரிசையில் இரண்டு இந்தியர்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
______________________________________________________________________
கவுண்டி தொடர்: ரகானே விலகல்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரகானே (வயது 36). இவர் இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். சமீப காலமாக மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக அவர், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.
இதில் ஒருநாள் தொடரில் அரையிறுதிச்சுற்று வரை முன்னேறிய லிசெஸ்டர்ஷையர் அணியானது, அரையிறுதியில் சொமர்செட் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது. இருப்பினும் ஒருநாள் தொடருக்கு பிறகு கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டில் லிசெஸ்டர்ஷையர் அணிக்காக ரகானே விளையாடி வந்தார். இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு சீசன் கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து ரகானே விலகியுள்ளதாக லிசெஸ்டர்ஷைர் அணி அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
______________________________________________________________________
காம்பீரின் ஐ.பி.எல். கனவு அணி
நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் காம்பீர்ஐ.பி.எல். தொடரில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்களை வைத்து சிறந்த ஐ.பி.எல். கனவு லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.
அதில் தொடக்க ஆட்டக்காரராக கொல்கத்தா அணியில் தன்னுடன் இணைந்து விளையாடிய ராபின் உத்தப்பாவை தேர்ந்தெடுத்துள்ளார். காம்பீர்தேர்வு செய்த அணியில் 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். காம்பீர்தேர்வு செய்த சிறந்த ஐ.பி.எல். கனவு 11 அணி பின்வருமாறு., கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, சூர்யகுமார் யாதவ், ஜாக் காலிஸ், யூசுப் பதான், ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, டேனியல் வெட்டோரி மற்றும் மோர்னே மோர்கல்.
______________________________________________________________________
நாதன் லயன் நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்தால் விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற இந்திய பேட்ஸ்மேன்களை தங்களால் வீழ்த்த முடியும் என அந்நாட்டின் ஸ்பின்னர் நாதன் லயன் கூறியுள்ளார். மேலும் இம்முறை இந்தியாவை 5 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- ஜெய்ஸ்வால் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பற்றி இங்கிலாந்தின் டாம் ஹார்ட்லியிடம் பேசி கேட்டறிந்தேன். மிடில் ஆர்டரில் சர்பராஸ் அல்லது ராகுல் வருவாரா என்பது தெரியவில்லை. இந்தியா முழுவதும் சூப்பர்ஸ்டார்களை கொண்ட வீரர்களாகும். விராட் கோலி அங்கே இருப்பார். ரிஷப் பண்ட் வங்காளதேச தொடரில் விளையாட உள்ளார். எனவே அந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் பெரிதாகி வருகிறது. அதனால் டெஸ்ட் போட்டிகள் இறப்பதாக மக்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாங்கள் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்களாகி விட்டது. அதைப்பற்றி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய போதே நான் சிந்திக்கத் தொடங்கினேன். எனது கண்களை நீண்ட காலமாக வைத்துள்ளேன். இம்முறை ஆஸ்திரேலியா 5 - 0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று நான் கணிக்கிறேன்" என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்க நகைகள் மீதான கடன்களில் எச்சரிக்கையாக இருக்க நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
23 Dec 2025சென்னை, நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி
-
எட்டு மாவட்டங்களுக்கு புதிய த.வெ.க. நிர்வாகிகளை நியமனம் செய்தார் விஜய்
23 Dec 2025சென்னை, த.வெ.க.வில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் விஜய் தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் எத்தனை இடம்
23 Dec 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் வருமாறு.
-
இலங்கை கடற்பைடையால் கைதாகும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Dec 2025சென்னை, இலங்கைக் காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்த
-
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Dec 2025சென்னை, சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க.
-
நன்னிலம், மயிலாடுதுறை உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
23 Dec 2025சென்னை, நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன்’ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் வங்காள தேச தூதரகத்தின் முன் இந்து அமைப்பினர் போராட்டம்
23 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர்.
-
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக தேர்தலை எதிர்கொள்வோம்: பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேட்டி
23 Dec 2025சென்னை, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதிர்கொள்வோம் என்று தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-12-2025.
23 Dec 2025 -
அமெரிக்கா: சிறிய ரக விமானம் கடலில் விழுந்ததில் 5 பேர் பலி
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளான
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை நிறுத்தினேன்: டொனால்ட் ட்ரம்ப்
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
-
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து நிச்சயம் வேண்டும்: அதிபர் ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை
23 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள்
23 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 75 ஆயிரம் வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் வருகிற டிச.
-
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குகிறது இந்தியா
23 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
-
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை நாளை முதல் வழங்கும் இண்டிகோ
23 Dec 2025மும்பை, விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன
-
ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
23 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் ஆவணங்களில் நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் படங்கள் மீண்டும் சேர்ப்பு
23 Dec 2025வாஷிங்டன், எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப்பின் புகைப்படங்களை அந்நாட்டு நீதித்துறை மீண்டும் சேர்த்துள்ளது.
-
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Dec 2025சென்னை, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழக தேர்தல் பா.ஜ.க.
-
பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 காவல் துறை அதிகாரிகள் பலி
23 Dec 2025லாகூர், பாகிஸ்தானில், காவல் துறையினரின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
-
6500 கி. எடையுள்ள ’புளு பேர்ட்-6' செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்
23 Dec 2025பெங்களூரு, 6500 கி. எடையுள்ள அமெரிக்காவின் ’புளுபேர்ட்-6′ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்.
-
இ.பி.எஸ். உடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
23 Dec 2025கோவை, அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை என்றும் தொகுதி பங்கீடு
-
வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு - பதற்றம்
23 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அங்கும் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவமனையில் திடீர் அனுமதி
23 Dec 2025சென்னை, கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவமனையில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்ட நிலையில் வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெள
-
பிரதமருடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
23 Dec 2025புதுடெல்லி, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடினார்.
-
தேசிய விவசாயிகள் தினம்: உழவர் நலனை காக்கும் திராவிட மாடலின் சாதனைகள் தொடரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
23 Dec 2025சென்னை, உழவர் நலனை காக்கும் திராவிட மாடலின் சாதனைகள் தொடரும் என்று தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


