முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் உற்பத்தி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      தமிழகம்
TRP Raja

Source: provided

சென்னை: நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா  தெரிவித்தார் . 

தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் அதிநவீன எஸ்.யு.வி கார்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்து பெருமிதம் தெரிவித்தார். இந்த கார்களை தமிழ்நாடு அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற, வேலுச்சாமி உள்ளிட்ட பொறியாளர்கள் வடிவமைத்து முத்திரை பதித்துள்ளனர்.

அதன்பின்னர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தமிழ்நாட்டில் தான் நடைபெற வேண்டும் என்பது தான் முதல்வரின் நோக்கம். மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தமிழ்நாட்டில் தான் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது. ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் 1 நிலையில் உள்ளது. காரின் பாகங்கள் எல்லாமே தமிழ்நாட்டில் தயார் செய்யப்பட்டது என சொன்னதும் முதல்வர் ரொம்ப சந்தோஷப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து