எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 43 வயதான மகேந்திர சிங் டோனி தனது 18-வது ஐ.பி.எல். சீசனில் விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான அவர், தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது மைல்கல் சாதனைகளை பார்க்கலாம்.
மவுசு குறையவில்லை...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் டோனிக்கான மவுசு என்பது இம்மியளவும் குறையவில்லை. சி.எஸ்.கே. அணியின் சொந்த மைதானமான சென்னை மட்டுமல்லாது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாட செல்லும் இடமெல்லாம் மஞ்சள் படைகள் படையெடுப்பே அதற்கு சான்று. புள்ளிவிவரங்கள், அதன் நம்பர்கள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவர் டோனி. விளையாட்டை நேசிக்கும் அனைவரும் இதை ஏற்பாளர்கள். இருப்பினும் ஐ.பி.எல். களத்தில் அவரது நம்பரும் பேசுகிறது.
அதிக முறை...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை பட்டம் வென்று கொடுத்த கேப்டன். 10 முறை ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை விளையாடி உள்ளது. டோனி தலைமையிலான சி.எஸ்.கே. அதிக முறை அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதோடு 2010, 2014 ஆகிய சீசன்களில் டோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பட்டம் வென்றுள்ளது.
252 சிக்ஸர்கள்...
ஐ.பி.எல். களத்தில் டோனி மொத்தமாக 264 போட்டிகளில் விளையாடி 5,243 ரன்களை எடுத்துள்ளார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் 234 போட்டிகளில் விளையாடி 4,669 ரன்கள் எடுத்துள்ளார். 149 கேட்ச் மற்றும் 41 ஸ்டம்பிங் செய்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் 84. மொத்தம் 252 சிக்ஸர்களை விளாசி உள்ளார். அவரது விக்கெட் கீப்பிங் திறனுக்கு நிகரானவர் சர்வதேச கிரிக்கெட்டில் கூட இன்று இல்லை என்று சொல்லலாம்.
பின்புலம்...
டோனி என்பவர் அனைவருக்கும் பிடித்த போக முக்கிய காரணம் அவரது பின்புலம். அவர் கிரிக்கெட்டில் சாதித்த அவரது விடாமுயற்சி, மன உறுதியின் காரணமாகவே அவருக்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு கிடைக்க காரணம்.
சீசன் வாரியாக செயல்பாடு...
கடந்த 2024 சீசனில் நீளமான முடி வைத்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசி சில ஓவர்களில் களத்துக்கு வந்து சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷி படுத்தினார்.
2023 சீசனில் அவரது தலைமையிலான சி.எஸ்.கே. அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
2022 சீசனில் அணியில் கேப்டன்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் சி.எஸ்.கே. வெளியேறியது. இந்த சீசனில் 232 ரன்களை டோனி எடுத்தார்.
2021 சீசனில் டோனி தலைமையிலான அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. கரோனா பரவல் காரணமாக இந்த சீசனில் பிற்பாதி போட்டிகள் அமீரகத்தில் நடைபெற்றது.
2020 சீசனில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என டோனி பேசி இருந்தார். இந்த சீசனில் 200 ரன்களை டோனி எடுத்தார்.
2019 சீசனில் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆனார் டோனி. மொத்தம் 416 ரன்கள் எடுத்தார்.
2018 சீசனில் இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். அரங்கில் விளையாடியது. அப்போது மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது சி.எஸ்.கே.. இந்த சீசனில் 455 ரன்களை டோனி எடுத்தார்.
2017 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக டோனி விளையாடி இருந்தார். அந்த முறை இரண்டாவது இடம் பிடித்து புனே அணி தொடரை நிறைவு செய்தது. அந்த அணிக்காக டோனி 574 ரன்களை 30 போட்டிகளில் எடுத்தார்.
2016 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியை டோனி கேப்டனாக வழிநடத்தினார். இந்த சீசனில் 284 ரன்களை டோனி எடுத்தார்.
2015 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடம் பிடித்தது. இந்த சீசனில் 372 ரன்களை டோனி எடுத்தார்.
2014 சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இந்த சீசனில் 371 ரன்களை டோனி எடுத்தார்.
2013 சீசனில் இரண்டாம் இடம் பிடித்தது சென்னை. இந்த சீசனில் 461 ரன்களை டோனி எடுத்தார்.
2012 சீசனில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது சி.எஸ்.கே.. இந்த சீசனில் 358 ரன்களை டோனி எடுத்தார்.
2011 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனில் 392 ரன்களை டோனி எடுத்தார்.
2010 சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது டோனி தலைமையிலான சி.எஸ்.கே.. இந்த சீசனில் 287 ரன்களை டோனி எடுத்தார்.
2009 சீசனில் அரை இறுதியில் சி.எஸ்.கே. விளையாடி இருந்தது. இந்த சீசனில் 332 ரன்களை டோனி எடுத்தார்.
2008 சீசனில் இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே. விளையாடி இருந்தது. இந்த சீசனில் 414 ரன்களை டோனி எடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2025
22 Apr 2025 -
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக சம்பளம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
22 Apr 2025சென்னை : தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
புதுச்சேரியில் பேருந்து நிலையத்தை திறக்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
22 Apr 2025புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
-
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ள
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் : சென்னை ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2025சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன், கன்னுக்குட்டி ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
பென்னாகரம் புளிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: அமைச்சர் உறுதி
22 Apr 2025சென்னை : பென்னாகரம் புளிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
22 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பேச அனுமதி கொடுக்கவில்லை என்பது ஜனநாயக படுகொலை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
22 Apr 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி கொடுக்கவில்லை என்பது ஜனநாயக படுகொலை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 
-
சென்னையில் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
22 Apr 2025சென்னை : சென்னையில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
-
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வில் உ.பி.யை சேர்ந்த மாணவி முதலிடம்
22 Apr 2025புதுடெல்லி : 2024 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் (ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன.
-
ஊட்டி துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பு : ஆளுநர் மாளிகை அறிவிப்பு
22 Apr 2025சென்னை : ஊட்டியில் வரும் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டினைத் தொடங்கி
-
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு : துணை முதல்வர் உதயநிதி தகவல்
22 Apr 2025சென்னை : விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100 வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவி
-
ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்ட ஜே.டி.வான்ஸ்
22 Apr 2025ஜெய்ப்பூர் : இந்தியா வந்துள்ள அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், நேற்று குடும்பத்துடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார்.
-
நிஷிகாந்த் துபே கருத்துக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
22 Apr 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை விமர்சித்து பா.ஜ.க.
-
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ. 48,344 கோடியாக அதிகரிப்பு
22 Apr 2025சென்னை : கடந்த 2024-2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
22 Apr 2025ஹைதராபாத் : ரியல் எஸ்டேட் நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்கில் வரும் 28-ம் தேதி ஹைதராபாத் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை
-
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு
22 Apr 2025சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துற
-
அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திரமோடி
22 Apr 2025புதுடெல்லி : "சவுதி அரேபியாவுடனான வரலாற்று ரீதியிலான நீண்ட கால உறவுகளை இந்தியா மதிக்கிறது.
-
பிராமணர்கள் குறித்த அவதூறு கருத்து: மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்
22 Apr 2025டெல்லி : பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
-
சென்னையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
22 Apr 2025சென்னை : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
போப் பிரான்சிஸ் மறைவுக்கு 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு: மத்திய அரசு
22 Apr 2025புதுடெல்லி : போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்றத்திற்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை : துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேச்சு
22 Apr 2025புதுடெல்லி : பாராளுமன்றம் தான் உயர் அதிகாரம் கொண்டது. அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை என்று ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
-
யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் சிவச்சந்திரன் முதலிடம்
22 Apr 2025சென்னை : 2024 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று (ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன.
-
3 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் போர்: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு
22 Apr 2025மாஸ்கோ : உக்ரைன் போர் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
-
சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
22 Apr 2025திருவண்ணாமலை : சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில் திருவண்ணாமலையில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.