முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: 2025-ம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையுடன் தாயம்மாள் அறவாணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா நேற்று சிறப்பாக நடத்தப்பட்டது.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் வீட்டில் உள்ள கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு நேராக கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார். அங்குள்ள கருணாநிதி யின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். வீட்டில் இருந்த தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.

அதன்பிறகு அண்ணா அறிவாலயம் சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து அதன் அருகில் வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முரசொலி அலுவலகம் சென்று கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து உருவப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.

பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்று வணங்கினார். அதன்பிறகு முதல்வர்  மு.க.ஸ்டாலின் அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டம் சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து படத்துக்கு மலர்தூவி வணங்கினார். அவருடன் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் வந்திருந்தனர். இதன்பிறகு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த கருணாநிதியின் பெருமையை போற்றிடும் வகையில் அவர் பிறந்தநாளான ஜூன் 3-ம் நாள் (நேற்று) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க கலைவாணர் அரங்கில் நடைபெற்ற செம்மொழி நாள் விழாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அனைவரையும் தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ் செம்மொழி குறித்த கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். அதன் பிறகு நிகழ்ச்சி தொடங்கியதும் முத்தமிழறிஞரின் முத்தமிழ் கலை பண்பாட்டுத் துறை வழங்கும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லோருக்கும் எல்லாமுமாய் என்ற முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த ஆவணப்படம் செய்தித் துறை சார்பில் செம்மொழி நாள் குறும்படம் வெளியிடப்பட்டது.

இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முனைவர் தாயம்மாள் அறவாணன் என்பவருக்கு 2025-ம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கி விருதுத் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கலைஞர் மு.கருணாநிதியின் திருஉருவச் சிலையும் வழங்கி சிறப்பித்தார். மேலும் செம்மொழி நாள் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 5 பேருக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார். விழாவில் தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரையும் வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து