எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடர் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்த டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் நாங்கள் விளையாடவுள்ள மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடராகும். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இருப்பினும், எங்களால் இந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் மிகவும் நன்றாக செயல்பட்டோம். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றோம். தனிப்பட்ட விதத்தில் நான் மிகவும் நன்றாக பந்துவீசுவதாக உணர்கிறேன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதனைத் தொடர விரும்புகிறேன். வலுவான அணிகளுக்கு எதிராக விளையாடுவது என்னுடைய பந்துவீச்சை மேம்படுத்திக் கொள்ள உதவும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சவாலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
_________________________________________________________________________________________________________________________
ஜம்மு காஷ்மீர் அணி சாதனை
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜம்மூ காஷ்மீர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 211 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆயுஷ் தோசேஜா 65 ரன்கள் எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகுப் நபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய காஷ்மீர் அணி 310 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பராஸ் டோக்ரா 106 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் சிமர்ஜீத் சிங் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 99 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய டெல்லி அணி 277 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் காஷ்மீர் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து விளையாடிய காஷ்மீர் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
_________________________________________________________________________________________________________________________
நேரு ஸ்டேடியத்தை இடிக்க முடிவு
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 60 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியம் கட்டப்பட்ட ஆண்டிலேயே அங்கு ஆசிய விளையாட்டு போட்டி அரங்கேறியது. சர்வதேச தடகள போட்டி நடத்துவதற்கு அனைத்து வசதிகளும் கொண்ட இந்த ஸ்டேடியத்தில் கால்பந்து மைதானமும் உள்ளது. 1984, 1991-ம் ஆண்டுகளில் இங்கு இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது நினைவிருக்கலாம். அதன் பிறகு இந்த மைதானம் கிரிக்கெட் போட்டிக்கு பொருத்தமானதாக இல்லை என கூறி வேறு இடத்தில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது.
2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக ரூ.900 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சமீபத்தில் உலக பாரா தடகள போட்டி நடந்தது. இந்த நிலையில் நேரு ஸ்டேடியத்தை இடிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 102 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடகளம் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான எல்லா வசதிகளும் இருக்கும் வகையில் விளையாட்டு நகரத்தை வடிவமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
_________________________________________________________________________________________________________________________
ராஜஸ்தானுக்கு ஜடேஜா கேப்டன்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்லவிருக்கும் ரவீந்திர ஜடேஜா அந்த அணிக்கு கேப்டாகுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக, ஐபிஎல் தொடரில் சாம்சன் - ஜடேஜா பரிமாற்றங்கள்தான் பேசுபொருளாக இருக்கின்றன. சிஎஸ்கேவில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா (37 வயது) ராஜஸ்தானுக்கும், அங்கிருக்கும் சஞ்சு சாம்சன் (31 வயது) சிஎஸ்கே அணிக்கும் மாறுவதாகக் கூறப்படுகிறது.இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகுவார் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜடேஜா, மீண்டும் சொந்த மண்ணின் அணியில் விளையாடி ஓய்வை பெற இது நல்ல வாய்ப்பாக இருக்குமெனவும் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்தினை கூறியுள்ளார்கள். சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவின் மாற்றத்தை ஏற்க முடியாமல் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 254 ஐபிஎல் போட்டிகளில் 3,260 ரன்கள் குவித்துள்ளார். 170 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டு பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்டார். இந்நிலையில், ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக மாறினால் அவரது கிரிக்கெட் பயணத்திற்கு நல்ல மாற்றமாக இருக்குமென முன்னாள் வீரர்கள் கருத்துள்ளார்கள்.
_________________________________________________________________________________________________________________________
ரிச்சா பெயரில் கிரிக்கெட் திடல்
13-வது ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்ற மேற்கு வங்கத்தின் சிலிகுரியைச் சேர்ந்த 22 வயதான விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷை கௌரவப்படுத்தும் விதமாக டிஎஸ்பி பதவி வழங்கப்பட்டது. மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி, முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் ஈடன் கார்டன் கிரிக்கெட் திடலில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியும் கலந்து கொண்டார்.
இந்த விழாவில், ரிச்சா கோஷுக்கு ரூ. 34 லட்சம் பரிசுத் தொகை, வங்க பூஷண் விருது வழங்கி முதல்வர் மமதா பானர்ஜி, அவருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து, டிஎஸ்பி பணிக்கான நியமனக் கடிதத்தையும் வழங்கினார். மேலும், முதல்வர் மமதா பானர்ஜி மேடையில் பேசுகையில், “ரிச்சாவுக்கு வாழ்த்துகள். அவர் 22 வயதிலேயே உலகச் சாம்பியன் ஆகிவிட்டார். சந்த்மோனி பகானில் 27 ஏக்கர் நிலத்தில் ஒரு கிரிக்கெட் திடல் கட்டப்படவுள்ளது. அதற்கு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிரணி வீராங்கனை ரிச்சா கோஷின் பெயரிடப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள பல்வேறு கிரிக்கெட் திடல்கள் பெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி, அருண் ஜேட்லி, நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களையே கொண்டுள்ளன. அதேவேளையில், இந்தியாவில் உள்ள கிரிக்கெட் திடல்களின் ஸ்டாண்டுகளுக்கு மட்டுமே கவாஸ்கர், விவிஎஸ் லக்ஷ்மண், சச்சின், தோனி, கோலி, சேவாக் போன்ற விளையாட்டு வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் திடல் கட்டப்பட்டு, அதற்கு ரிச்சா கோஷின் பெயர் சூட்டப்பட்டால், இந்தியாவில் ஒரு வீரர் / வீராங்கனையின் பெயரில் உள்ள முதல் கிரிக்கெட் திடல் என்ற சிறப்பை இந்தத் திடல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-11-2025.
11 Nov 2025 -
மீண்டும் தங்கம் விலை உச்சம்
11 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனை ஆனது.
-
அதர்ஸ் திரைவிமர்சனம்
11 Nov 2025படத்தின் தொடக்கத்தி்ல் ஒரு வேன் விபத்துக்குள்ளாகி பின்னர் வெடித்து சிதறுகிறது.
-
வெள்ளகுதிர இசை வெளியீட்டு விழா
11 Nov 2025வெள்ளகுதிர படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் கே.
-
பாகிஸ்தானில் துணிகரம்: கோர்ட் வெளியே குண்டு வெடித்ததில் 12 பேர் பலி
11 Nov 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நீதிமன்றம் வெளியே நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானார்கள்.
-
2 நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
11 Nov 2025திம்பு : 2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
-
போதைப்பொருள் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார் நடிகர் ஸ்ரீகாந்த்
11 Nov 2025சென்னை : போதை பொருட்களை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நுங்கம்பாக்கம் லேக் வியூ பகுதியை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்தை கடந்த ஜூன் 23-ந்தேதி சென்னை போதை பொருள் நுண்ணறிவு பி
-
நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
11 Nov 2025சென்னை : நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்த வாரம் ரீ ரிலிசாகும் சேரனின் ஆட்டோகிராப்
11 Nov 2025சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
-
கும்கி 2’-க்காக கடும் குளிரில் படப்பிடிப்பு
11 Nov 2025பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கும்கி 2’.
-
ஆரோமலே திரைவிமர்சனம்
11 Nov 2025பள்ளி, கல்லூரி, வேலை என அனைத்து இடங்களிலும் காதல்களில் மூழ்கி முத்து எடுக்க நினைக்கும் நாயகன் கிஷன் தாஸுக்கு ஏமாற்றமே கிடைக்கிறது.
-
எஸ்.பி.முத்துராமன் தொடங்கி வைத்த அறியாத பசங்க பட விழா
11 Nov 2025பெருமாள் கிரியேஷன்ஸ் திருமதி பி.பவுனம்மாள், இளஞ்செழியன் தயாரிப்பில், எம்.வி.ரகு கதை, திரைக்கதை எழுதி இசையமைத்து இயக்கும் படம் ‘அறியாத பசங்க’.
-
டெல்லி கார் வெடிப்பு: பலி 12 ஆக அதிகரிப்பு
11 Nov 2025டெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது
-
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ பதவியேற்றார்
11 Nov 2025நியூயார்க் : இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனான செர்ஜியோ கோர் பதவியேற்பு விழா அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
-
தி.மு.க. வரலாற்றை ஆவணப்படுத்தும் பணி தொடரும்: துணை முதல்வர்
11 Nov 2025சென்னை : தி.மு.க. வரலாற்றை ஆவணப்படுத்தும் நம் பணி தொடரும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராஜபாளையம் அருகே கோவிலில் இரட்டைக்கொலை: இ.பி.எஸ். கண்டனம்
11 Nov 2025சென்னை : ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னை பெண் கவுன்சிலர் அலுவலகம் மீது நா
-
டெல்லி குண்டு வெடிப்பு: பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார் முதல்வர் ரேகா
11 Nov 2025புதுடெல்லி : டெல்லி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கும் என்று காயமடைந்து சிகிச்சை பெற்று
-
புரட்டிப்போட்ட புங்-வாங் புயல்: பிலிப்பின்ஸ், தைவானில் மக்கள் வெளியேற்றம்
11 Nov 2025மணிலா : புங்-வாங் புயலால் பிலிப்பின்ஸ் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
-
ஈக்வடார் சிறைச்சாலையில் கலவரம்: 31 பேர் உயிரிழப்பு
11 Nov 2025மச்சாலா : ஈக்வடார் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.
-
டெல்லி கார் வெடிப்பில் தொடர்பு: யார் இந்த மருத்துவர் உமர் முகமது?
11 Nov 2025டெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எஸ்.ஐ.ஆர்.-ஐ தடுப்பதே நமது கடமை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
11 Nov 2025சென்னை : மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எஸ்.ஐ.ஆர்.-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 10 நலிந்த கலைஞர்கள் உள்பட 525 கலைஞர்களுக்கு ரூ.85 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
11 Nov 2025சென்னை : தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 525 கலைஞர்களுக்கு ரூ.85 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
வாரணவாசி அருகே விபத்தில் சிக்கிய லாரி: பயங்கரமாக வெடித்து சிதறிய சிலிண்டர்கள்
11 Nov 2025அரியலூர் : அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியதால் பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: என்.ஐ.ஏ. விசாரணை தொடக்கம்
11 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்கியுள்ளது.
-
தமிழகத்தில் நடக்கும் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தக்கூடாது: சுப்ரீம் கோர்ட்
11 Nov 2025புது டெல்லி : தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதோடு, சிறப்பு தீவ


