எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,491 பயனாளிகளுக்கு 278 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில், 235 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 91 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 1,84,491 பயனாளிகளுக்கு 278 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கடம்பூரில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு மற்றும் உலர்களத்துடன் கூடிய ஏல மையம்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அந்தியூர் அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கட்டிடம், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், தாமரைப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15 லட்சம் ரூபாய் செலவில் ஓமியோபதி பிரிவுக் கட்டிடம், சத்தியமங்கலம் நகராட்சியில் 75 லட்சம் ரூபாய் செலவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில், சத்தி-அத்தாணி-பவானி சாலை முதல் தாசரிபாளையம் சாலை வரையில் 7 கோடி ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலம்; பள்ளிக் கல்வித் துறை சார்பில், டி.ஜி.புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 64 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 7 கூடுதல் வகுப்பறைக் கட்டிட ங்கள், கும்மக்காளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1 கோடியே 64 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் 6 கூடுதல் வகுப்பறைக் கட்டிட ங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள், குடிநீர் வசதிகள், மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் 6 கூடுதல் வகுப்பறைக் கட்டிட ங்கள், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 82 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் 12 வகுப்பறைக் கட்டிட ங்கள், கருமாண்டிசெல்லிபாளையத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய நூலகக் கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் 61 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட கருணை இல்லம் உள்ளிட்ட மொத்தம், 235 கோடியே 73 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நசியனூர் பேரூராட்சியில் 16 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகள், காஞ்சிக்கோவில் பேரூராட்சியில் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார துணை நிலையம், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொங்கம்பாளையத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்துதல், செம்பாம்பாளையத்தில் கல்வெட்டுப்பாலம் அமைக்கும் பணிகள், கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல்; வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், மரூரில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள், நீர்வளத் துறை சார்பில், எண்ணமங்கலத்தில் வழுக்குபாறைபள்ளம் ஓடையில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள், குண்டேரிப்பள்ளம் அணையின் கால்வாய் கதவுகள் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் உள்ளிட்ட மொத்தம், 91 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1,566 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவித்தொகை, காதொலிக் கருவி, மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சிறப்பு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், பிரெய்லி கைக்கடிகாரங்கள், ஒளிரும் மடக்கு குச்சிகள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் போன்ற பல்வேறு உதவிகள்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 120 பயனாளிகளுக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 625 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் மற்றும் முதல்வரின் வீடுகள் கட்டுமானத் திட்டத்தின் கீழ் வீடுகள்; தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 7020 பயனாளிகளுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி மற்றும் அடையாள அட்டைகள் வழங்குதல்; சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 449 பயனாளிகளுக்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகளை அவர் வழங்கினார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 10,100 பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு, பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்கிட மானியம், கல்வி மற்றும் திருமண உதவித்தொகை, கண்கண்ணாடி வாங்க நிதியுதவி, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் ஈமடச்சடங்கிற்கான நிதியுதவி, விபத்து மரணத்திற்கான நிவாரண நிதியுதவி, நலவாரிய பதிவு அடையாள அட்டைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,84,491 பயனாளிகளுக்கு 278 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2025.
26 Nov 2025 -
ரூ.4.90 கோடியில் மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்பதா? ஈரோடு அரசு விழாவில் கவர்னருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
26 Nov 2025ஈரோடு, தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார்.
-
இந்தியா ஒரு கலாச்சாரத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல: அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு முதல்வர் பதிவு
26 Nov 2025சென்னை, இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல என்று அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
தோனிமடுவுவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோட்டிற்கு 6 புதிய அறிவிப்புகள்
26 Nov 2025ஈரோடு, அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலி
-
ஈரோடு மாட்டத்தில் அரசு விழா: ரூ. 605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,
-
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் தேவை: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 Nov 2025சென்னை, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
26 Nov 2025ஈரோடு, ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
தேசிய பால் தினத்தை முன்னிட்டு அமைச்சர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
26 Nov 2025சேலம் : தேசிய பால் நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
-
விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை: ஈரோடு அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
26 Nov 2025ஈரோடு, விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று ஈரோடு அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு 'சென்யார்' புயலால் பாதிப்பு இல்லை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
26 Nov 2025சென்னை, மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் சென்யார் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
த.வெ.க.வில் இன்று இணைகிறார்..? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
26 Nov 2025சென்னை, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
-
அரசமைப்பு சட்டப்பதிப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Nov 2025புதுடெல்லி : மலையாளம், மராத்தி, நேபாளி உள்பட 9 மொழிகளில் அரசமைப்புச் சட்டத்தின் எண்மப் பதிப்புகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு புதன்கிழமை வெளியிட்டார்.
-
தமிழருவி மணியன் தனது கட்சியை தமிழ் மாநில காங்கிரசில் இணைத்தார்
26 Nov 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை தமிழ் மாநில காங்கிரசில் இணைத்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காவல்துறை அதிகாரி உட்பட 5 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை
26 Nov 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி உட்பட 5 பேரிடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை: மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
26 Nov 2025மதுரை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம்: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
26 Nov 2025சென்னை, இந்திய அரசியலமைப்பின் மாண்பையும், அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.


