எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சை. பிப்.19
தமிழ் உணர்வில்லாத கருணாநிதி, கொள்ளை அடிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்.
தஞ்சையில் நடந்த இலவச திருமண விழாவில் கழக அமைப்பு செயலாளர் பொன்னையன் பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 63வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
விழாவில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் சி. பொன்னையன். கழக விவசாயப்பிரிவு தலைவர் தஞ்சை மாவட்ட பொறுப்பாளருமான துரை.கோவிந்தராஜன் நடத்தி வைத்தார். முன்னாள் அமைச்சர் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ வரவேற்று பேசினார். மணமக்களுக்கு தங்கத்தாலியை கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
மணமக்களுக்கு தங்கத்தாலி, பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, பட்டு புடவை, கிரைண்டர், காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு, nullஜை தட்டு, குடம், தவலை, தாம்பாலம், அண்டா, தேக்சா, பாய், தலையனை, சமுக்காளம், பெட்சிட், சூட்கேஸ் உள்ளிட்ட 63 சீர்வரிசை பொருட்களே 32 ஜோடி மணமக்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சீர்வரிசைகளாக வழங்கப்பட்டது.
விழாவில் கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் பேசியதாவது,
தஞ்சை அரசில் விழிப்புணர்வு மிக்க மாவட்டம். கடந்த காலங்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு புகழ்சேர்த்த மாவட்டம், தற்போது அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கும் புகழ் சேர்த்து வருகிறது. கட்சி நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் முதல் நிகழ்ச்சியாக எடுத்து செய்யும் மாவட்டம் இந்த தஞ்சை மாவட்டம். எந்த மாவட்டத்திலும் நடக்காத நிகழ்ச்சியை தஞ்சை தெற்கு மாவட்டம் நடத்தியுள்ளனர்.
ஜெயலலிதாவின் உணர்வுகளை பட்டிதொட்டியெல்லாம் பரப்பி வருகிறார்கள். நான் அரசியல் படித்த, பட்க்க அடித்தளமிட்டது தஞ்சை மாவட்டம். இந்த இயக்கம் ஒரு குடும்பத்தை போன்றது. இந்த திருமணம் அதிமுக என்ற குடும்ப இயக்கத்தில் நடைபெறும் திருமணம். இந்த மணமக்கள் நீடூழி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று கழக பொது செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பு உள்ளார். பொது வாழ்வில் தூய்மை கடைபிடிக்க வேண்டும் என்று பெரியார் கூறினார். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அண்ணா கூறினார். ஆனால் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் எளிமையின் உருவமாக திகழ்கிறார். தமிழ் சமுதாயத்திற்காக, தமிழ் மக்களுக்காக தினமும் 18 மணி நேரம் அயராது உழைக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது என்று முதலில் ஜெயலலிதாதான் கூறினார். திமுக விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிந்து உள்ளது . கருணாநிதிக்கு தமிழ் உணர்வு கிடையாது. கொள்ளை அடிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். போலி கம்பெனிகள் கோடி கோடியாக கொள்ளை அடித்ததை பிரதமரும் நியாயப்படுத்தி உள்ளார். இலங்கையில் எம்.ஜி.ஆருக்கு சிலை வைத்தனர். கருணாநிதிக்கு சிலை வைத்தனர். ஆனால் அவற்றை உடைத்து விட்டனர். இதை பொறுக்க முடியாததால்தான் இலங்கை தமிழர் படுகொலைக்கு கருணாநிதி துணை போனார். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டியுள்ளது. அரிசி பருப்பு வலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் அரிசி பருப்பு விலை கட்டுக்கோப்பாக இருந்தது. அதிமுக ஆட்சியில் பதுக்கல்காரர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால் திமுக ஆட்சியில் பதுக்கல்காரர்கள் கருணாநிதியின் பங்காளிகளாக உள்ளனர். இந்த மணமக்கள் எல்லா நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட தலைவர் டி.மெய்க்கப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்ரி கோபால், பொன் முத்துவேல், தொகுதி கழக செயலாளர்கள் தஞ்சை துரை.திருஞானம், பட்டுக்கோட்டை பி.என். ராமச்சந்திரன், திருவையாறு எம்.ஜி.எம்.சுப்பிரமணியம், ஒரத்தநாடு கோ.தேவதாஸ், பேராவூரணி மா.கோவிந்தராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.ராஜேந்திரன், கே.பஞ்சவர்ணம், மாவட்ட பிரிவு செயலாளர்கள் ஆர்.காந்தி, மாணவர் அணி அமுதா ரவிச்சந்திரன், மகளிர் அணி சாமி தவிடன், இலக்கிய அணி வி.புண்ணியமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி ராஜேஸ்வரன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மலைஅய்யன், எம்.ஜி.ஆர் மன்றம் ஒன்றிய நகர கழக செயலாளர்கள் துரை.வீரணன், வி.சூரியமூர்த்தி, செந்தில், சுப்பிரமணியன்,வி.கே.டி.பாரதி, நகர செயலாளர்கள் சத்தியமூர்த்தி, துரைமாணிக்கம், சுந்தர்ராஜன், பொதுக்கு உறுப்பினர்கள் கவிதா கலியமூர்த்தி, பேரூர் கழக செயலாளர்கள் த.செல்வம், துரை.சேகர், ஏ.பிச்சை மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர், ஊராட்சி கிளைக்கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் தஞ்சை நகர கழக செயலாளர் வி.பண்டரிநாதன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.