முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,பிப்.24 - இந்தியாவுடன் உறவை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.  இந்திய பாராளுமன்ற குழு லோக்சபை சபாநாயகர் மீரா குமார் தலைமையில் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இந்திய குழுவுக்கு நேற்றுமுன்தினம் இஸ்லாமாபாத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. வரவேற்பில் பாகிஸ்தான் நாட்டு தற்காலிக அதிகாரி பரூக் நாயக் பேசுகையில் இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த அதிபர் ஜர்தாரி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார் என்றார். பாகிஸ்தான் கொள்கைகளும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் பரூக் கூறினார். 

இந்தியாவுடன் காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துவதோடு நல்ல கருத்துக்களை பரிமாற்றம் செய்வதாலும் முடியும். இந்த பிராந்திய வளர்ச்சிக்கும் அமைதிக்கும் உதவும் வகையில் இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவை வைத்துக்கொள்ள பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள காஷ்மீர் மற்றும் தண்ணீர் பங்கீடு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இது ஒரு நல்ல நேரம் என்றும் இதை இருநாடுகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நாயர் மேலும் கூறினார். பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் வெளிநாடு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஆபரேஷன் நடந்ததாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்