எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் - 4 - கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் .மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பை உறுதி செய்து இருக்கிறார். தமிழக அரசு நியமித்த நிபுணர் குழுவும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூறி இருக்கிறது. இந்த அணுமின் நிலையம் 7 அடுக்கு பாதுகாப்பு கொண்டது என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். எனவே போராட்டம் நடத்துபவர்கள் இதை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பணம் செலவு செய்வதாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி நடந்த விசாரணையில், வாகனங்களில் மக்களை அழைத்து வருவது, உணவு வழங்குவது போன்றவற்றுக்காக ஏராளமான பணம் செலவு செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த பணம் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுவதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து 12 தொண்டு நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டன. கணக்கு தணிக்கையின்போது 6 அமைப்புகளின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதில் 3 நிறுவனங்கள் பணத்தை முறைகேடாக செலவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 3 நிறுவனங்கள் மீதும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகளை சி.பி.ஐ.யும், 2 வழக்குகளை தமிழக அரசும் பதிவு செய்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் அணு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 1 லட்சம் மெகாவாட் மின்சாரம் அணு உலை மூலம் தயாராகிறது. சீனாவில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. பிரான்சில் 68 சதவீதமும், ஜப்பானில் 26 சதவீதமும், ரஷ்யாவில் 20 சதவீதமும், தென்கொரியாவில் 10 சதவீதமும் அணு உலை மூலம்தான் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 20 அணுமின் உலைகள் உள்ளன. இதில் 19 உலைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் 4 ஆயிரத்து 700 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவீதம்தான். பாகிஸ்தானில் சீனா உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ராஜஸ்தான், கர்நாடகா, அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. சூரிய ஒளி மூலம் 1 யூனிட் மின்சாரம் தயாரிக்க 16 ரூபாய் செலவாகிறது. அனல்மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்க 3 ரூபாய் 60 காசும், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க 6 ரூபாயும் செலவு ஆகிறது. அணுமின் நிலையம் மூலம் மின்சாரம் தயாரிக்க 2 ரூபாய் 45 காசுதான் செலவு ஆகிறது. அணுமின் நிலையம் பாதுகாப்பானது. குறைந்த விலையில் மின்சாரம் தயாரிக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டுக்கு அணு மின்சாரம் மிகவும் அவசியம் என்று எடுத்துக் கூறியபோதும் உள்நோக்கத்துடன் நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தியவர்கள் மீது 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டம் ஒழுங்கை காப்பது மாநில அரசின் பிரச்சினை. இதில் மத்திய அரசு தலையிடாது. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை குறிப்பு பற்றி மத்தியமாநில அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல் படத்தொடங்கும். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சுற்றுலா விசாவுடன் தமிழ் நாட்டுக்கு வந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்தது. அவர் கூடங்குளம் அணுஉலை போராட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். அவருடைய லேப்டாப் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது லேப்டாப்பில் கூடங்குளம் அணுஉலை படம் இருந்தது. மேலும் தேவைப்பட்டால் அவரை அழைத்து வந்து விசாரிப்போம். போராட்டம் காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.750 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையும் இதுதான். நானும் மத்திய மந்திரி ஜி.கே. வாசனும் இதுபற்றி பிரதமரிடம் கூறி இருக்கிறோம். இலங்கையில் மட்டும் அல்ல உலகில் எந்த பகுதியில் மனித உரிமை மீறப்பட்டாலும் மத்திய அரசு அதை எதிர்க்கும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். பேட்டியின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உடன் இருந்தார். அவரும் இதே கருத்தை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.