முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை அல்போன்சா முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 -​ காதலன் வினோத்குமார் மர்மமான முறையில் மரணமடைந்ததை அடுத்து அவருடைய பெற்றோர் நடிகை அல்போன்சா மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்ததை அடுத்து எந்த நேரத்திலும் நடிகை கைது செய்யப்படலாம் என அஞ்சி நடிகை அல்போன்சாவும், அவருடைய தம்பி ராபர்ட்டும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த வாரம் நானும் வினோத்குமாரும் ஒன்றாக தான் இருந்தோம். நாங்கள் உறங்கிகொண்டிருந்தோம் நடு இரவில் வினோத்குமார் எழுந்து நன்றாகதான பாத்ரூம் சென்று வந்தார். சிறிது நேரம் கழித்து நான் பாத்ரூம் சென்றேன். நான் பாத்ரூம்மில் இருந்த நேரத்தில் அவர் தூக்கிட்டு இறந்து கிடந்தார்.

நான் வெளியே வந்து பார்த்தேன் அவரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் எண்ணுள் இருந்தது. நான் தான் அவரை நள்ளிரவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். மருத்துமனைக்கு கொண்டு செல்லும் போதே வழியில் அவருடைய உயர் பிரிந்தது. நடந்த சம்பவம் இதுதான். 

ஆனால், என் மீதும் என்தம்பி ராபர்ட் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். வினோத்குமாரின் பெற்றோர்கள் என் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆகவே எந்த நேரத்திலும் நானும் என்னுடைய தம்பியும் கைது செய்யப்படலாம் என அஞ்சி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பை தருவேன். ஆகவே, எனக்கும், என் தம்பிக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை பிரின்சிபல் செசன்சு கோர்ட் நீதிபதி பொன் கலையரசன் முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்